Sunday, July 26, 2020

பதில்தான் என்ன?

வீடு வரை மனைவி வீதி வரை உறவு காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ உயிருக்கும் மேலான மனைவியோ சதைக்குச் சதையான பிள்ளைகளோ அன்பிற்குரிய உடன் பிறந்தவர்களோ நேசமுடைய பந்து சகாக்களோ எவரிடமும் விடைப்பெற்றுக்கொள்ளாமல் போனால் போதும் என்று ஓடவைக்கும் சென்ற பின்னும் ஒதுக்கி வைக்கும் உன் நோக்கம்தான் என்ன? வாழ்வே மாயம் என்று அறிந்த அறிவை மீண்டும் அறிய வைக்க இதுவும் ஒரு முறையா? இது உனக்குத் தகுமா? அன்பே வடிவமாகி அறவணைப்புடன் வாழ்ந்த ஒருவரை நீ தனியாக வந்தாய், தனியாகப் போ என்று அனுப்பிவைக்கும் காரணம்தான் என்ன? போகும் நேரம் வந்தது, அழைத்துச் செல் பக்கத்தில் இருப்பவர்களால் தடுக்க முடியுமா என்ன? எங்கள் அன்பு உன்னையே கலங்க வைக்கும் என்று நீ அஞ்சி இப்படிச் செய்கிறாய், இல்லை? அபிமன்யுவைத் தனியாகச் சூழும் கௌரவர்களைப் போல் கொரோனாவைச் சூழச் செய்து எங்களை விலக்கிய உன் மீது எழும் கோபம் உன்னையே எறிக்க இன்னும் எத்தனைச் சோதனைகள்? இன்னும் ஏன் தாக்குகிறாய்? அமைதி, அமைதி, சற்று பொறு எங்களை நிம்மதி மூச்சு எடுக்க விடு.