Monday, May 29, 2017

எனக்குள் எழுந்தது ஒரு கேள்வி

வானத்தையே பார்த்து நின்றேன்
அதன் நீலம் தூண்டியது ஒரு கேள்வி
பூமியையே பார்த்திருக்கும் நீ
கண்டது பல பல விந்தை
கேள்விப்பட்ட வதந்திகளில்
எது பொய், எது உண்மை?

Wednesday, May 24, 2017

வெயில் காயும் நேரம்

"தோட்டக் காரனை வரச்சொன்னாயா?" ஸ்ரீதர் தன் மனைவி மனோஹரியைக் கேட்டான்.

"ஆமாம்," என்று வாச உள்ளுக்கு வந்தாள் மனோஹரி. "என்னப்பா, காலைல ஒன்பது மணிக்கு வான்னு சொன்னேன், இப்படி எட்டு மணிக்கே வந்துட்ட?"

Saturday, May 13, 2017

சுதந்திர பறவை

"ஏண்டி, தனியாகவா வெளியூருக்கு போகப்போகிற?" தாய் மஞ்சு சற்று கவலையுடன் கேட்டாள். "அப்பா ஒத்துக்க மாட்டாரே!"

"அப்பாவை சமாளிப்பது உன் பொறுப்பு! நான் படிச்சவ. படிக்க வைச்சதே நீங்கதான். இப்ப இப்படி பேசினால்? எனக்கு அசிங்கம்!" மகள் விஜி பதில் கூறினாள்.