Monday, November 28, 2011

எதற்கு விதிவிலக்கு

பணக்காரன் மகன்
வெளிநாட்டில் வேலையாம்
உள்நாட்டில் வசிக்கும் தந்தைக்கு
சோறு போட முடியலையாம்


அவன் எனக்குச் செய்தது
தந்தையின் கடமைத்தானே!
எனக்கு தன் சொத்தைக்கொடுப்பதும்
இந்நாட்டின் முறைதானே!

கூட்டை விட்டுப்பறவை
பறப்பது இயற்கைத்தானே
நான் செய்வதை மட்டும்
யாவரும் பழிப்பானே!

என்று கேட்கும் அவனுக்கு
இன்று ஒரு சட்டம் வருவது
நம் கலாச்சாரம் என்ற பெருமைக்கு
பெரிய ஒரு இகழ்ச்சித்தானே!

அடுத்து வரும் நாட்களை
நினைத்து மனம் கலங்குமே!
குழந்தைகளை வளர்ப்பதற்கும்
ஒரு சட்டம் வந்துவிடுமே!


நம் முன்னேற்றத்திற்கு
மேல்நாடு வழி காட்டி
அதனை பின் பற்றும் நமக்கு
இதில் ஏன் விதிவிலக்கு?




No comments:

Post a Comment