Sunday, October 6, 2019

துதி

வணங்கினேன் தாயே, வரம் கொடு
இருள் நீங்கி ஒளி வீச, அருள் கொடு
உன்னை புகழ்ந்து பாட குரல் வளம் கொடு
உன் காலடியில் விழ ஆரோக்கியம் கொடு

துன்பங்களிலும் உன்னை நினைக்கும் மனம் கொடு
என்றும் நல்லதை காணும் பார்வை கொடு
தவறுகளை புறக்கணிக்கும் முதிர்ச்சி கொடு
அகம்பாவத்தை வெல்லும் பக்குவம் கொடு

கிடைத்ததை ஏற்கும் மனநிறைவு கொடு
இருப்பது போதும் என்கிற மனப்பான்மை கொடு
அலையும் மனதை மீட்டெடுக்கும் திறன் கொடு
என்றும் உன்னுடன் ஒன்றிட வழி கொடு.