Thursday, March 1, 2018

இங்கும் ஒரு ஜான்சி ராணி

"என்ன பொன்னுத்தாயி? பள்ளிக்கு கிளம்பி விட்டாயா?" என்று பக்கத்து வீட்டு காஞ்சனா கேட்டுக்கொண்டே வெளியில் வந்தாள்.

"அதுக்குத்தான் கிளம்பிக் கொண்டிருந்தேன். திடீரென்று ஆபிஸிலிருந்து போன் வந்தது..." முழு உண்மையை கூறுவதா வேண்டாமா என்று தயங்கியவள், சந்தோஷம் தாங்காமல் மேலும் கூறினாள், "என்னை நிரந்தரமாக்கப் போகிறார்களாம்!"