Sunday, December 23, 2012

எங்கே மனிதன்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?

கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?

ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?

மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?

மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!

மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.

Saturday, December 15, 2012

துப்பாக்கி கலாசாரம்

இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!

Saturday, December 1, 2012

கிராதகி

செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்

இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்

வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்

அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்

அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்

எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்