Saturday, June 22, 2013

வயது ஒரு தடை அல்ல

இன்று நம் நாட்டில் ஒரு பெரிய பிரச்சனை (ஊழலைத்தவிர), முதியோர்களின் வாழ்க்கைத்தான். மகன், மகள் வெளி நாட்டில் இருக்கும் நிலையில், இங்கே அவர்கள் தனிமையில் போராடுவது தான்.

ஆனால் இதை கேட்கும் பொழுது சில நேரங்களில் ஆச்சரியமாகவும் இருக்கும். தன் பிள்ளைகள் கூட இல்லை என்பது வருத்தமாக இருந்தாலும், அவர்கள் வாழ்க்கை ஏன் வருத்ததுக்குரியது ஆகி விடுகிறது? 

இப்படி தான் வயதானவர்கள் எல்லோரும் கஷ்டப்படுகிரார்களா?

ஆனால் இல்லை. எல்லோர் வாழ்க்கையும் அப்படி ஆவதில்லை. ஒரு சிலர் தனக்கென்று சில ஹாப்பீஸ் வளர்த்துக்கொள்கிறார்கள்; தனக்கென்று சில விதிகளை நியமித்துக் கொள்கிறார்கள். 'உனக்காக என் வாழ்க்கையை வாழ்ந்தேன், இப்போ நீ எனக்காக வாழ வேண்டும்' என்று தன மக்கள் மீது எதிர்பார்ப்பு இல்லாமல் வாழ்கிறார்கள்.

மூன்று வருடங்களுக்கு முன்னால் ஒரு 87 வயது பெரியவரை சந்தித்தேன், அவருடைய  சரித்திரம் எழுத. 70 வயதில் தன் மகன்களுடன் சேர்ந்து ஒரு நகை கடை ஆரம்பித்து அதை ஒரு நிலைக்கு கொண்டு வந்தார். தன் மதத்திற்காக, சைவ உணவை பரப்புவதற்காக, சமூகத்தில் நன்மை வளர்வதற்காக, ஆர்கானிக் உணவு வளர்வதற்காக  என்று பலவிதமான சமூக நல வேலைகளில் இந்த வயதிலும் அவர் மும்முரமாக ஈடு படுகிறார். மகனுடன்தான் இருக்கிறார் என்றாலும், தன்னால் எவருக்கும் தொல்லை இல்லாமல் இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்காக தன்னை அர்பணிக்கிறார்.

இது மற்றவர்களுக்கு சாத்தியமில்லையா? நல்ல படிப்பு, ஓரளவுக்கு மதிப்பு உள்ள வேலைகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள் வயதான காலத்திலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துகாட்டு.

இவருக்கு சமீபத்தில் சோடியம் குறைந்ததால் அவ்வப்பொழுது மயங்கி விழுவாராம். இவருடைய ஒரு நுரையீரல் தான் வேலை செய்யும். முப்பது வயது ஆவதர்ர்க்குல்லேயே ஒன்றை எடுக்க வேண்டி வந்தது. காது சரியாக கேட்காது. மனைவி இல்லை, இறந்து பல வருடங்கள் ஆகி விட்டன. பெரிய மகனையும் இழந்திருக்கிறார்.

தனிமை, வயது, இழப்புகள் - இவை எதுவுமே நாம் செய்ய வேண்டியவற்றிற்கு தடை இல்லை என்பதற்கு இவர் ஒரு முன்னுதாரணம்.

Thursday, June 6, 2013

மரம் கேட்கிறேன்

இன்று ஒரு தகவல் - விறகிற்க்காக மரங்கள் வளர்க்கப்பட போகின்றனவாம். கேட்க நன்றாகத்தான் இருக்கு, ஆனால் கொஞ்சம் வருத்தமாகவும் இருக்கு.
எங்கிருந்து வந்தேன் நான்? விதை பூமியில் தானே விழுந்து, வானம் பொழிந்து நீர் பாய்ச்சி, சூரியன் வெளிச்சம் கொடுத்து, காற்று ஸ்வாஸமாக மாற...
எதையும் எதிர் பார்க்காமல் வளர்ந்ததுமற்றும் அன்றி, ஜீவன் அத்தனைக்கும் அடைக்கலம் கொடுத்து, பூமித்தாயின் கைகளாகி, அனைத்தையும் என் கரங்களால் அறவணைத்து...
காற்றை சுத்தப்படுத்தி, நீரை பூமியில் இறக்கி, கொடும் வெய்யிலை தடுத்து குடையாகி...
உண்ட உணவு, ரசிக்க மலர்கள், இப்படி பலவற்றை உலகத்திற்கு அர்பணித்து...
என் இறப்பில் கூட பல பயன்கள் - விறகு, கட்டை, பிரம்பு - ஏன், காகிதம் கூடத்தான்!
இப்படி வாழ்விலும் சாவிலும் பயனையே அளிக்கும் என்னை இறக்கம் இன்றி அழித்து இன்று தவிப்பதுகூட தெரியாமல் வாழும் மனிதனே!
காற்றிற்கு விலை பேசி, அழ்காய் பாக்கேஜ் செய்திருந்தால் எனக்கு இன்று இந்த கதி வந்திருக்காது அல்லவா?
எதையும் விலை போடும் மனிதன் இருக்கும் வறை என் மதிப்பு என்ன?