Sunday, July 16, 2017

மெல்லத் திறந்த கதவு

"ஒரு வாரம் லீவு... சுற்றுலா போக திடீர் திட்டம்... அடுத்து ஞாயிறு சந்திக்கிறேன்..." மஞ்சுவின் மெசேஜ் வந்தது.

"நயவஞ்சகி," என்று சாரதா அவளை மனதிலேயே திட்டிக்கொண்டாள். "நேற்று வரை லீவுக்கு எங்கேயும் போகப்போறதில்லை என்று கூறி விட்டு இன்றைக்கு திடீரென்று எப்படிக் கிளம்பினாள்?" என்று முணுமுணுத்தாள்.