Wednesday, February 17, 2016

பழுது - கவிதை

ஒரு பழைய துணியை எடுத்தாள்
வீட்டில் படிந்த தூசியை துடைத்தாள்
வருபவர்கள் புகழ்வதை ரசித்தாள்
அவள் பெருமையில் பூரித்தாள் 

முகம் கழுவி அதற்கு அழகு சேர்த்தாள்
கண்ணில் மை, இதழ்களில் நிறம் பூசினாள்
ஆடையின் பளபளப்பால் தன்னை அலங்கரித்தாள்
 நகைகளின் ஜொலிப்பில் தன்னை மறந்தாள்

சிப்பந்தியிடம் கடிந்துக்கொண்டாள்
தோழியுடன் வம்பு பேசினாள்
இளக்காரம் செய்து நகைத்தாள்
மனதில் படிந்த பழுதை துடைக்க மறுத்தாள்.