Tuesday, August 30, 2011

Vaakjaalam - The Word Trap

என் மகள் தமிழ் படித்து முடிப்பதற்குள் எனக்கே தமிழ் மறந்து போய் விடும் போல இருக்கிறது. எழுத்துக்கூட்டி படித்தாலும், அந்த வார்த்தைகளே என்ன என்று புரியாததால், மரண வேதனையாக இருக்கிறது. "போரும்மா" என்று அவள் கெஞ்சும்பொழுது, நிஜமாகவே போரும் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. கதை சுவாரஸ்யமாக இருந்தாலும், ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக படிப்பதால் அதற்க்கு அர்த்தமும் புரிந்து தொலைக்க மாட்டேன் என்கிறது. ஏன்தான் பேசும் பாஷையும், எழுதுவதிலும் இவ்வளவு வேறு பாடுகளோ! அவர்களோடு - அவாளோட; விற்பதற்கு - விக்கறதுக்கு....

ஆனால், ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள சொல்கிறேன். இங்கிலிஷில் படிக்க ஆரம்பித்த பொழுதும் இதே திணறல் தான். அப்பொழுதெல்லாம் இங்க்லீஷ் கதைகளை தமிழில் சொல்ல சொல்வாள். இப்பொழுதெல்லாம், தமிழ் கதைகளை இங்கிலிஷில் சொல்ல சொல்கிறாள்! என்ன ஒரு மாற்றம்! இதுதான் இக்கறைக்கு அக்கறை பச்சை என்பதோ?

Lasting Impressions: Old and New Bonds

Lasting Impressions: Old and New Bonds: My belief is that after a particular age, as we become involved in our professional life, and establish a relationship with our spouse and h...

Sunday, August 28, 2011

Chakrvyooham - The Vicious Circle

பெண் வேலை செய்ய
வேண்டும் வேண்டாம், 
சட்டம் வைக்க நீ யார்?
கேட்க துடிக்கும் நா

திறமையை ஒளித்து
வீட்டில் அடைத்து
பூட்டி வைக்கவா
பிறந்தாள் அவள்?

தனக்கென ஒரு அழகிய
பாதையை வகுத்து
கூறிய பார்வையுடன்
முன்னேற துடிக்கும்

அவளை தடுக்க
நீ யார்
என்று கேட்க
எழும்பும் நா

சோர்ந்து, களைத்து
நாபுரமும் சுற்றி
அயர்ந்த கண்கள்
நாவை தடுத்து

பார் சற்று அங்கே
என்று காட்டும் காட்சி
ஒரே கணம்
மனதை துளைத்து 

ஐயோ பாவம்
என்று சொல்ல 
இவன் நிலை 
அதைவிட பரிதாபம்

என்ன சம்பளம்?
எங்கே வேலை?
என்ன பதவி?
என்ற கேள்வி

சுற்றி சுற்றி வர
அந்த ஆண் மகன்
தனக்கென்று வழி தேடி
செல்ல ஒரு வழி ஏது!

தனக்கு பிடிக்குமா 
என்று கேட்காமல்
ஊருக்கு வேணுமே
என்று ஓடி அலைந்து

"கார் ஸ்கூட்டர் பங்களா"
உழைத்து சேகரித்து
அணில் போல் குவித்து 
அவன் நிலை மட்டும் என்ன?

ஊருக்காக வாழ்ந்து
அதற்க்கு பயந்து சாகும்
அவனும் ஒரு விதத்தில்  
அடைக்க பட்டவன் 

பார்ப்பதற்கு ஆஹா
விடுதலை பெற்றான்
அவன் என்று 
குமறும் பொழுது

அவனுக்கு குமறல்
மனதில் புழுக்கம்
தனக்குள் சிக்க வைக்கும்  
அந்த சக்ரவ்யூஹம்.

Thursday, August 25, 2011

Lasting Impressions: The Celebrated Dancer - Short Story

Lasting Impressions: The Celebrated Dancer - Short Story: She sat through the program with great difficulty. The dancer had been written about in that morning's paper, which had worked its charm and...

Wednesday, August 24, 2011

Oru thaai pillai

ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளைகள்
ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள்
கூட சேர்ந்து விளையாடியவர்கள்
குத்துச்சண்டை போட்டவர்கள்

தாய் தந்தையிடம் மாட்டி வைத்து
அவர்களுக்கு தெரியாமல் காப்பாற்றியவர்கள்
எவனாவது வம்பு சண்டைக்கு வந்தால்
சேர்ந்து நின்று எதிர்த்தவர்கள்

வழிகாட்டியாக பெரியவனும்
உயிரை கொடுக்க சிறியவனும்
தாய்ப்போல் பார்த்துக்கொள்ளும் பெரியவளும்
பிள்ளைப்போல் அன்பை பொழியும் சிரியவளும்

வளர்ந்து ஆளாகி தத்தம் வழியில் 
மணமும் செய்து தன் வாழ்க்கை அமைத்து
தன குடும்பம் பெருக பழசை துறந்து
புது வாழ்வில் ஒன்றி தன்னை மறந்து

நீ யார் கேக்க, என்று பகைமை கொண்டு
உயிர்கொடுப்பவன் உயிரை எடுத்து
போடி நீதான் எப்பவும் செல்லம்
தாயாகிருன்தவள் குறையை கண்டு

ஒரு குடும்பமாக இருந்தவர்கள்
வீட்டை பிளைக்க காரணம் கண்டு
நீயும் நானும் வேறு வேறு
என்று தத்தம் வழியை கண்டு கொண்டு

தாயை வதைத்து, அது கண்ணை மறைத்து
தாயே எதிரியாகு நிற்கும் பொழுது
ரத்த கண்ணீர் வழிவதை கண்டு
துடைப்பது யார், நீயா நானா?

Lasting Impressions: It is Everywhere - Short Story

Lasting Impressions: It is Everywhere - Short Story: She was fed up of the fever. It had gone undiagnosed for more than a week, but tapered off after she swallowed some antibiotics.When it recu...

Monday, August 22, 2011

Lasting Impressions: It Begins Early - Short Story

Lasting Impressions: It Begins Early - Short Story: "Finally I got admission for my child in the school I was trying!" Father said proudly to friend. "Oh really! How wonderful! LKG, right?" ...

Sunday, August 21, 2011

Lasting Impressions: Are We Really Against Corruption?

Lasting Impressions: Are We Really Against Corruption?: Am I a cynic? I don't know. I should join in the applause to the way the average Indian Middle Class has risen up to the occasion and joined...

Saturday, August 20, 2011

Kurangilirundu pirantha manithan

மரம் தாவி .
நொடிக்கு ஒரு
வித்தை காட்டி
ஒரு நிமிடம் நேரே
மறு நிமிடம்
தலை கீழே சாய்த்து

இது குரங்கா, மனமா?
குரங்குபோல் மனமா?
ஒரு சிந்தனையில் இருந்து
மற்றொன்றிற்கு தாவி
பிடித்தவர்களிடம் குறை கண்டு 
வேண்டாவதரிடம் தொற்றிக்கொண்டு  

ஒரு நொடி 
ஒன்றை சொல்லும்
அடுத்த நொடி
அதை பொய்யாக்கும்
மாருவதுகூட தெரியாமல்
நிஜம் என்று பொய்யை சாதிக்கும்

இந்த குரங்கை நம்பி
வாழ்க்கையை ஓட்டும் 
மடங்கள் நாம்
வாக்களித்து 
காப்பாற்ற தெரியாத
ஜடங்கள் நாம்

சரி எது தவறெது
என்று அறியாமல் 
வாக்ஜாலங்களில் சிக்கி
மிரண்டு போராடி
மற்றவர்களை பழித்து
பிழைக்க முயலும் கோழை நாம்.

Monday, August 15, 2011

Lasting Impressions: All for Big Bucks

Lasting Impressions: All for Big Bucks: "I am not a political writer, or too savvy about developments in the political world. My newspaper reading is cursory at best, and many a tim..."

Porulaathaaram irunthum manathil ethu thaaraalam? - High on cash, low on humanity


நான் நமது நாட்டு தலைவரின் சுதந்திர தின பேச்சை நான் கேட்கவில்லை. ஆனால் ஹிந்துப்பத்திரிகையில் தலைப்பு படித்தேன். லஞ்சத்திற்கு எதிரான போராட்டத்தை சிறிது நிதானத்துடன் நடத்துவதற்கு வேண்டுகோள் போல தோன்றியது.

அதாவது, லஞ்சம் வேகமாக வாங்கலாம், நாடு துரிதமாக சீர்  கெடலாம். ஆனால் அதை எதிர்த்து போராட்டம் மட்டும் நிதானமாக இருக்க வேண்டும். ஏன், இன்னும் இவருக்கு வர வேண்டியது வந்து சேரவில்லையா? இல்லை இப்படி சொல்லுமாறு அவர் மீது எதாவது  வற்புறுத்தலா?

அதுவும் தான் இருக்கட்டும். இந்த அண்ணா ஹஜாரே அவர்கள் மீதும் தான் என்ன ஒரு நெஞ்சழுத்தத்துடன் நமது நாட்டு அரசு பழி சுமத்துகிறது? அதை எதிர்த்துப்பேசுபவர்கள் மீது ஏதோ நிறைய புகார்கள் ரெடியாக வைத்திருப்பாற்போல்!

இப்படி எங்குத்தான் எல்லாத்தையும் பரித்துச் செல்லப்போகிரார்களோ தெரியவில்லை. சில நாடுகளில் இப்படியெல்லாம் சேர்த்தால்தான் வாழ முடியும். நம் நாட்டில் இருக்கும் சுதந்திரத்திற்கு இது தேவையே இல்லையே? சிறிது இருந்தாலும் நன்றாகவே வாழலாமே? கொண்டு போய் வெளி நாட்டு வங்கிகளில் பூட்டி வைத்து என்ன சுகத்தை காண போகிறார்கள்?

வங்கியில் எவ்வளவு இருந்தாலும், மனதில் தாராளம் இல்லையே? குறுகிய மனிதர்களின் பொருளாதாரம் அவர்களுக்கு எப்பொழுதுமே நிம்மதியை கொடுக்காது.


Thursday, August 11, 2011

Poo Malarattume - Let it Blossom

ஒரு போர்வைக்குள்
மூடப்பட்ட அந்த பூ
காற்றுக்கும், வெளிச்சத்திற்கும்
மன்றாடிய அந்த பூ

ஒரு அன்புப்பார்வைக்கு
ஏங்கிய அந்த பூ
தன் மணம் பரவ
அல்லாடிய அந்த பூ

ஆதரவைத்தேடி இருட்டில்
நடுங்கிய அந்த பூ
அந்த பூ சிதருவதர்க்குள்
ஒரு முறை, ஒரே ஒரு முறை

அது தேடும் வெளிச்சத்தை
அது மேல் படர அந்த
போர்வையை கிழிக்க
மாட்டாயா, என் அன்பே?

அது பூத்து,
மணம் பரவ
அழகு மலர
ரசித்து சிரிக்க

உன் மனமிரங்கி,
அன்பு கசியும்
ஒரே ஒரு பார்வை
போதுமே, என் அன்பே

அந்த வானமே
அந்த பூவை நோக்கி
நீரும் வெயிலும் 
பொழிந்தாற்போல்

மகிழ்ந்து, மலர்ந்து
பரவசமடைந்து
உல்லாசமாக 
விரியும் அந்த பூ




Wednesday, August 10, 2011

Lasting Impressions: The Inner Space

Lasting Impressions: The Inner Space: "I stretch my hand To reach out to you But away you step Leaving me to rue I look up and smile See you look away A knife twists in my ..."

Monday, August 8, 2011

Vithiyin Vilaiyattu - The Conspiring Destiny

அது எப்படி? சில நேரங்களில், சில கேள்விகள் நம் மனதை பாதிக்கும் பொழுது, நம்பளையும் அறியாமல் நமக்கு பதில் கொடுப்பவர்கள் நம் எதிரே எதேச்சியாக தோன்றுகிறார்கள்? நாம் கேள்வி கேக்காமலேயே நமக்கு மனதில் தெளிவு ஏற்படும்படி ஒரு விஷயத்தை கூறுகிறார்கள்?

விதி நம்மை அந்த நிலைக்கு அழைத்துச்செல்கிறதா? இல்லை, நம்மை பாதிக்கும் அந்த விஷயம், மனதளவிலேயே அந்த மனிதருக்கு போய் சேர்ந்து அவர்களும் இதற்குத்தான் என்று அறியாமல் நம்மை வேறு ஏதோ ஒரு காரணத்திற்க்காக அழைக்கிறார்கள். பேசிக்கொண்டே இருக்கும் பொழுது அவர் சொல்வது ஏதோ நம் மனதில் இருக்கும் கேள்விக்கு தானாகவே பதிலையும் சொல்லி விடுகிறார்கள். 

இந்த அதிசயத்திற்கு என்ன பெயர் சூட்டுவது!

Lasting Impressions: The Power Hurt

Lasting Impressions: The Power Hurt: "Though it is the turn of my Tamil blog, the comment on my previous post on sealing the breach made me think. 'Friendship means never having ..."

Sunday, August 7, 2011

Lasting Impressions: Sealing the Breach

Lasting Impressions: Sealing the Breach: "I loved Rock On for the most part. Farhan Akhtar was cool, and Arjun Rampal a darling. But somehow, the way their friendship breaks and the ..."

Thursday, August 4, 2011

Ithu oru kaaranam!

நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி - ஒரு பெண் தன் பெற்றோர்களுக்கு எதிராக புகார் செய்திருக்கிறாள். அவளுக்கு 17 வயதுதான். அவளுக்கு திருமணம் செய்ய விரும்பியதால், அவள் காவல் நிலையத்தில் புகார் செய்து அவர்கள் கைது.

ஆஹா, என்ன தைரியம், என்ன பொறுப்பு என்று நினைத்தேன். மைனர் பெண்களுக்கு திருமணம் என்பது தவறு. அப்படி செய்யும் பெற்றோர்களுக்கு தண்டனை கொடுப்பது சரியே.

ஆனால் மேலும் படிக்கும் பொழுது சீ தூ என்று ஆகி விட்டது. அவள் யாரையோ விரும்பினாளாம். அந்த பையன் அவள் பெற்றோர்களுக்கு பிடிக்கவில்லையாம், அதனால் அவளுக்கு அவசராமாக கல்யாணமாம்.

உலகத்தை பார்க்க பார்க்க வெறுப்புத்தான் அதிகரிக்கிறது!

Tuesday, August 2, 2011

Oru Ekkam - The Longing (sirukathai)

சூரியன் அஸ்தமிக்கும் நேரும். அந்தி வேளையில், ஜன்னல் அருகே நின்ற நான், ஏதோ ஒன்றை தேடினேன்.

ஒரு இனிய ராகம், மெல்லிசையாக என் மனதில் ஓடியது. அலைபோல் எண்ணங்கள் குதூகலித்தன. பசுமையான மரங்களும், நெருப்பை போல அதை சூழ்ந்த மலர்களும் என் இதயத்தில் குளுமையாக நிரம்ப.

ஆனால், ஒரு சஞ்சலிப்பு. எங்கே அவன் என்று தேடினேன். என் வாழ்க்கைக்கு அர்த்தம்ளிக்க வெள்ளை குதிரை மேல் வரும் கதாநாயகன், இனியும் அவனை எதிர்பார்ப்பது சரியா? ஒரு குடும்பம் என்று ஆன பிறகு, இன்னொருவனை தேடுவது?

பின்னாலிருந்து என்னை யாரோ பார்ப்பது போல் தோன்றியது. யார் என்று திரும்பிப்பார்த்தேன். கண்ணும் கண்ணும் கலந்தன. ஒரு புன் முறுவலுடன் அவன் "இதைப்பார்" என்று தன கழுத்தில் மாட்டியிருந்த காமெராவை என்னிடம் நீட்டினான். குழந்தைகள் ஓடி அருகில் வந்து, அம்மா! என்று அழைத்தன.

வெளியே தேடுவது என்னிடம் ஏற்கனவே இருக்கிறதே! என்று புரிந்து கொண்டேன். எனக்குள் வாசித்த மெல்லிசை இங்கிருந்துதானே உருவாகிறது என்று அறிந்து கொண்டேன். என் முன் இல்லாமல் என்னை கனிவாய் தாங்கி கொள்ளும் இதுவே என் உலகம்.

"போகலாமா?" என்று கேட்ட உடனே தலையை ஆட்டி, சிறுவர்கள் கையை பற்றி அவர் பின்னே செல்லும் பொழுது, என் கதாநாயகன் என்னுடனேயே இருப்பது போல் ஒரு சந்தோசம். அதை அரிந்து கொண்ட மகிழ்ச்சி.


Lasting Impressions: The Wait

Lasting Impressions: The Wait: "The wait, the long wait. At the window of life. For a whiff of fresh air For an exciting sight For fragrance sweet For golden light Fo..."

Monday, August 1, 2011

Lasting Impressions: The Turnaround

Lasting Impressions: The Turnaround: "I greeted it with warmth Making sure it was all there After all it had grown With so much love and care Fed on delicious sweets And lus..."