Friday, July 19, 2013

நமக்கும் ஒரு பொறுப்பு

ஹிந்து பத்திரிகையில் ஒரு நல்ல முயற்சி - நம்மூரில் உள்ள சாலைகளில் நடைபாதை இல்லாததையும், இருக்குமிடங்களில் பயனற்றவையாக இருப்பதை படம் பிடித்து அனுப்பித்தால், அதை பரசுராம் செய்து, அரசை அதற்கு வழி செய்ய ஒரு முயற்சி.

ஆனால், சாலையில் எதுக்குமே வழி இல்லை. இதற்க்கு சாலை பற்றாகுறை ஒரு காரணம் என்றால், அதை உபயோகிக்கும் விதம் இன்னொன்று. சாலை விதிகளை மீறும் வண்டி ஓட்டுனர் இருக்கும் வரை எந்த ஒரு முயற்சியுமே வீண் போகும். வெறும் யந்திரங்களையும், விதிகளையும் அறிமுகம் செய்தால் போதாது. நமது நாட்டின் மனோ பக்குவத்தை புரிந்து கொள்ளும் நாம் அதையும் மனதில் வைத்து, அதற்கேற்ப விழிப்பையும் ஜனங்கள் மத்தியில் எடுத்துச்செல்ல வேண்டும். இப்பொழுது இருக்கும் சாலைகளை சரியாக உபயோகித்தால் தான் இன்னும் புதுப்பிக்கும் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

இன்று தமிழ் அரசு பல விழிப்பு முயற்சிகளில் ஈடு பட்டிருக்கிறது. சாலை பிரயோகத்தையும் தன் முயற்சிகளில் தீவிரமாக சேர்த்துக்கொள்வது முக்கியம்.

கூடவே, நாமும் படித்த முட்டாள்களாக இல்லாமல், வண்டி நமது ராஜ்யம், மற்றவர்கள் நமக்கு வழி விட வேண்டியவர்கள் போல் நடந்து கொள்ளாமல் பொறுப்பாக நடக்கக்கடமை பட்டிருக்கோம்.

ஓ, இன்னொரு விஷயம். பெண் ஒட்டுனரைப்பார்த்தால் ஹார்ன் அடிக்கும் பழக்கத்தையும் கொஞ்சம் மாற்றிக்கொள்ளலாம். அவர்களை பின் தள்ளி நாம் எவ்வளவுதான் முன்னால் சென்று விட முடியும், இந்த மூச்சு முட்டும் சாலைகளில்?