Saturday, March 23, 2013

இந்திய பண்பாடு...?


நான் நம் இலக்கியத்திலிருந்தும் நம் புராண கதைகளிருந்தும் கற்றுக்கொண்டவை - அதிதி தேவோ பவ; பெண்கள் தாய், லக்ஷ்மி; கண்ணியமும் கட்டுப்பாடும் நம் இலக்கணங்கள்.

ஆனால், இன்று ஹிந்து பேப்பரில் ஒரு வெளிநாட்டுப்பெண்மணி எழுதி இருக்கும் ஒரு கட்டுரையை படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது. அவர் தன்  தோழிகளிடம் நம் நாட்டில் வரும் பொழுது எழும் எண்ணங்களைப்  பற்றி கேட்டார். அதற்க்கு அவர் தோழிகள் சொன்னது, இந்தியாவில் வரவேற்பு பிரமாதம். பலர் மிக பணிவுடனும் அக்கறையுடனும் அவர்களை வரவேற்கிறார்கள். ஆனால், பொது இடங்களில் அவர்களுக்கு பல துன்பங்கள் ஏற்படுகிறது. ஆண்பிள்ளைகள் அவர்களுடன் அத்துமீறி நடந்து கொள்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்னாள் நம் மத்திய அரசு ஆமிர் கானை வைத்து இந்த அதிதி தேவோ அவ என்ற நம்முடைய கலாச்சாரத்தை நினைவூட்டினார்கள். அதில் ஏதும் பயன் இருந்ததாக தெரியவில்லை. 

அது மட்டுமின்றி, நான் யோசித்துப்பார்த்தேன். அப்படியே நான்  இந்த மாதிரி சம்பவத்தின் பொழுது அங்கு இருந்து தடுத்து நிறுத்துப்பார்த்தால், எனக்கு என்ன கதியாகும்?

இப்படிப்பட்ட பயமும் தயக்கமும் ஏன்? ஏனென்றால் பல வருடங்களாக இந்திய பெண்களுக்கே  இப்படிப்பட்ட கீழ்த்தரமான நபர்களை பொது இடங்களில் எதிர்க்க வேண்டியிருக்கு. அந்த மாதிரி சமயங்களில் மற்றவர்கள் ஒரு தெருகூத்து நடக்கும் ஆர்வத்துடன் அதை கண்டு கழிக்கிறார்களே தவிர, கூட நின்று எதிர்ப்பதில்லை. 

இதுவே இந்திய கலாசாரமாகிவிட்டது  என்று கூட சொல்லலாம். தெருவில் கண்ட அநாதையான் ரூபாயை கூட நாம் எடுத்துக்கொள்ள தயங்கி கோவில் உண்டியலில் போடும் பொழுது, ஒரு பெண்ணை நாம்  அவள் உடை, நடை என்று எடை போட்டு அவளை சீண்டி, வேதனை படுத்தலாமா?

இதை எப்படி மாற்றுவது? இதற்க்கு அரசு தவிர நாம் தனிப்பட்ட முறையில் என்ன செய்ய வேண்டும்? இது ஒவ்வொரு இந்தியரும் யோசிக்க வேண்டிய விஷயம். 

Monday, March 11, 2013

வாழ்க்கை பந்தயம்

வண்டி மோதியதும்தான் அவன் கண் விழித்துக்கொண்டான். ஆனால் அதற்குள் அவனுடைய பிராணம் அவனை விட்டு விலகியது. திறந்தது உடலுடன் இருக்கும் விழியா அல்ல பிரியும் ஆவியின் கண்களா என்று அவனுக்கு சிறிதுநேரம் புரியவில்லை.

நினைவு பிரிந்தது.

நினைவு திரும்பும் பொழுது தலையில் கட்டு தெரிந்தது. எதிரே மனைவி. கண் அயர்ந்திருந்தாள். மெதுவாக எல்லாம் புலப்பட்டது. ஒரு கணமே கண் மூடியிருக்க வேண்டும். ஆனால் மறுகணமே எதிரே போகும் பெரிய வண்டி மீது அவன் போய் மோதியிருக்க வேண்டும். அவ்வளவு வேலை களைப்பு .

கண் மூடினான். இப்பொழுது கூடு வேலை என்ற வார்த்தை மனதில் களைப்பைதான் உண்டாக்கியது. எவ்வளவோ வேலைகள் இன்னும் முடிக்க வேண்டியது இருக்கு. இப்படி படுத்துக்கிடந்தால் என்ன லாபம்? எழுந்துக்கு முயற்சி செய்தான்.

மனைவி கண் முழித்தாள். அவனிடம் சட்டென்று வந்து, "எதாவது வேண்டுமா" என்று கேட்டாள். அவன் தலையசைத்து மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

மனைவி இங்கு வந்திருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது, ஆனால் ஆறுதலாகவும் இருந்தது. இந்த வேலையினால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடுவில் மனத்தாபம் தான் அதிகமாயிருந்தது.

ஒரு மாதம் கழித்து, மனைவியின் கனிவான பராமரிப்பில் உடல் குணமாகி அலுவலகத்திற்கு திரும்பும் பொழுது ஒரு சின்ன அதிர்ச்சி. அவன் இல்லாத பொழுதிலும் அலுவலகம் இழுத்து மூடப்படவில்லை. அவனுடைய வேலையை வேறு யாரோ மிக நன்றாகவே செய்திருந்தார்.

உன் தோளில் தான் இந்த அலுவலகமே நடக்கிருதா என்று மனைவி இடித்து கேட்ட பொழுது எவ்வளவோ கோபப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் ஒரு வெறும் கருவி தான், காரணகர்த்தா இல்லை என்று தெரிந்ததும் இத்தனை நாள் தன் வாழ்க்கையை வீணடித்திருக்கிறோம் என்று புலப்பட்டது. ஆனால் தன்னை ஒதுக்கிவிடப்போகிரார்கள் என்ற பயத்தில் அவன் மீண்டும் தன் திறமையை நிரூபிக்க வெகு தீவிரமாக முற்பட்டான்.