Saturday, May 21, 2016

நாட்டிலே மழை

நிலவை மறைத்தது மேகம்
அதை கண்டு சிலிர்த்தது தேகம்
கோடையில் மழையின் வேகம்
உற்சாகத்தில் பறந்தது விவேகம்

மேகமும் திரண்டது
பூமியும் குளிர்ந்தது
உடலும் தணிந்தது
புத்துணர்ச்சி ததும்பியது

ஆஹா, கதிரவன் நகைத்தான்
என்றும் நிலைப்பவன் நான்தான்
என்று; வெப்பத்தை அழைத்தான்
மேகங்களைக் கலைத்தான்

கத்திரி வெயில் திரும்பியது
போது மே என்று மனம் கதறியது
உஷ்ணத்தில் உடல் கரைந்தது
அதை நினைந்து மனம் கரைந்தது