Thursday, December 5, 2013

சுமைதாங்கி

ரொம்ப அழகான வீடு. சுற்றி மரங்கள். மான்கள். கிளி, மரங்கொத்தி, மைனா, பாம்பு என பல விதமான பக்ஷிகள். ஓ, பாம்புகூட சொன்னேன், இல்லை? ஆமாம, பாம்பு, கீரிப்பிள்ளை...

இவை இருப்பதைப்பற்றி அக்கரைக்கூட இல்லாமல், அங்கே தீவிரமாக கட்டட வேலை நடக்கிறது. நம் சௌகரியத்திற்கு தான்! மெட்ரோ ரயில்.

இத்தனை நாட்களாக வெறும் மேலோட்டமாகத்தான் வேலை. ஆனால் இப்பொழுது, தீவரமாக பயிலிங் வேலை நடக்கிறது.

கோவம் கோவமாக வரது. போட்டு பூமியை இப்படி யாராவது தாக்குவாங்கள? மரங்களை இப்படி வெட்டுவாங்களா? மனித ஜன்மம் உருப்படுமா?

ஆனால் அதே மனித ஜன்மத்தில் நானும் ஒன்று. வீடு வேண்டும் என்று வாங்கும் பொழுது, ஏதோ ஒரு மரத்தை வெட்டித்தான் கட்டியிருப்பார்கள். அஸ்திவாரம் போட பூமியை தோண்டியிருப்பார்கள், பயிலிங் செய்திருப்பார்கள். அப்பொழுது எழாத அக்கறை இன்று நாமும் பாதிக்க படுவோமோ என்ற நேரத்தில் தான் எழுகிறது.

ஆனால் எதையும் தாங்கி இன்னமும் கொடுக்க தயாராக இருக்கிறது உண்மையான சுமைதாங்கி பூமி.