Sunday, November 11, 2012

பட்டாசு வைபோகம்

வெடிக்கு பயந்து, என்னிடம் இருக்கும் சக்கரம் புஸ்வாணம் எல்லாவற்றையும் வெளிச்சம் இருக்கும் பொழுதே ஏத்தி விட்டு, மற்றவர்கள் பட்டாசு வெடிக்கும் பொழுது அறையில் கதவை சாத்திக்கொண்டு, காதலி மூடிக்கொண்ட நாளும் நினவிலிருக்கறது.

பிறகு கையில் ஊசிப்பட்டாசை கொளுத்தி வீரமாக எறிந்த ஞாபகமும் இருக்கு.
புச்வாணம் முகத்தில் வெடித்து கண்ணாடி சிதறியதும் ஒரு அனுபவம்.
அந்த வெடியை கொளுத்தி காதை மூடி தூர ஓடிய நினைவுகளும் முகத்தை மலரச்செய்யும்.

இப்பொழுது அடுத்த தலைமுறை மிக உற்சாகத்துடன் பட்டாசு வெடிப்பதை பார்க்கும் பொழுது, வருடத்தில் ஒரு நாள் அவர்களை தடுப்பதா என்ற ஒரு சிந்தனையும் மனதை தாக்குகிறது. நாம் வருடம் முழுதும் நம் சுற்று வட்டாரத்தை நாசம் செய்வதை விடவா இந்த குழந்தைகள் ஒரு நாளில் செய்து விடுவார்கள்?

அவர்கள் சுதந்திரமாக, ஜாக்ரதையாக பட்டாசு வெடிக்க இடம் விடாமல் கட்டிடங்கள் கட்டியது யார்? எல்லா இடங்களிலும் நடக்க கூட இடம் விடாமல் வண்டிகளை நிறுத்தியது யார்?