Sunday, July 29, 2012

பேட்டி

"என்ன படிச்சிருக்கீங்க?" அவள் கேட்டாள்.

"பீ.ஈ" அவன் சொன்னான்.

"இந்த வேலைல எத்தன நாளா இருக்கீங்க?"

"மூணு வருஷமா..."

"இது உங்க முதல் வேலையா? என்ன சம்பளம்? அப்ரைசல்ல என்ன சொன்னாங்க?"

அவன் முழித்தான். "நல்ல வேலை பண்ணறேன்னு..."

"வெளி நாட்டுக்கு அனுப்புவாங்களா? அதுக்கு சம்பளம் எப்படி?"

"ரெண்டு சம்பளம்..."

"ம்ம்ம்..." அவள் இன்னும் மிருதுவான குரலில் பேசினாள். "நான் வேலை செய்வத பத்தி என்ன நினைக்கிறீங்க?"

"அது உங்க இஷ்டம்."

"எனக்கு வெளியூர்ல வேலை வாய்ப்பு கடச்சா நீங்க  ஒத்துப்பீங்களா? நீங்களும் கூட வருவீங்களா?"

"ம்ம்..." அவன் தயங்கினான். இந்த கேள்வி அவனை குழப்பியது. பெண் பார்க்க வந்த இடத்தில் வேலைக்கு பேட்டிக்கு வந்தவனை கேள்வி கேட்பதைப்போல கேட்டுவிட்டு இப்படி கேட்டதும் அவனுக்கே ஒரு நிமிடம் தடுமாற்றம். ஆனால் அவன் தாய் சொல்லி அனுப்பியிருந்தாள். நிறைய தேடிய பிறகு இந்த பெண் வீட்டார் அவனைப்பார்க்க ஒப்புக்கொண்டிருந்தார். "எதையாவது ஒளறி கெடுத்துடாத!" என்று எச்சரித்து அனுப்பியிருந்தார். "உங்களுக்கு அதில்தான் இஷ்டம்னா எனக்கு ஓகே" என்று அரைகுறை மனதுடன் சொன்னான். அவனுக்கு ஆட்சேபனை ஒன்றும் இல்லை. ஆனால் ஒற்றுமை வேற்றுமைகள் தெரிந்துக்கொள்ளாமல் எப்படி இதுக்கு ஒத்துக்கொள்வது "உங்க ஹோப்பீஸ் ஒண்ணுமே சொல்லலையே."

"அதான் வாழ்க்கையே இருக்க தெரிஞ்சிக்க... அதுக்கு என்ன அவசரம்?" என்று அவன் வாயை பொத்தினாள் அவள். "ஓ, முக்கியமா, சமைக்க தெரியுமா? பிகாஸ் எனக்கு நோ இன்ட்ரெஸ்ட் இன் மானேஜிங் தி ஹவுஸ்."

என்ன ஒரு அழகான சிரிப்பு சிரித்தாள்! 


Sunday, July 22, 2012

குழப்பம் - சிறுகதை


சிறுப் பிள்ளைகள், பந்து விளையாடிக்கொண்டிருந்தன. பந்து வீசியப் பையன் ஸ்டும்ப்சை குறிப் பார்த்து வீசினான். அவன் குறி தப்பவில்லை. "போல்ட்!" என்று எல்லாரும் கையை தூக்கினர்.

பேட் செய்துக்கொண்டிருந்தப் பையன் "இல்லை! சீடிங்!" என்றான்.

"என்னடா சீடிங்? நேர விக்கெட்ல பட்டுது," என்று ஒரு பையன் வந்தான்.

பேட்டால் அவன் நீட்டிய கையை அடித்து அந்தப் பையன், "இல்ல! சீடிங்" என்று சாதித்தான்.

"டேய் மறுபடியும் அடிக்கறான்! வாங்கடா அவங்க அம்மாகிட்ட போய் சொல்லலாம்." எல்லாப் பிள்ளைகளும் கிளம்பின.

அந்தப் பையன் ஓடிக்கொண்டே தன் அம்மாவிடம் சென்று "அம்மா, எல்லாரும் என்ன வளையாட விடமாட்டேங்கறாங்கமா," என்று அழுதான்.

"இல்ல ஆண்டி அவன்தான்..."

"என் பையன போட்டு எப்பப்பார்த்தாலும் ஏமாத்தாதீங்க!" என்று விஷயம் தெரிந்துக்கொள்ளாமலேயே அந்தத் தாய் தன் மகனுக்காக பறிந்து வந்தாள்.

"இல்ல ஆண்டி அவன்தான் பேட்டால் அடிச்சான்." தன் சிவந்தக் கையை அடி வாங்கிய பையன் காட்டினான்.

அந்தத்  தாய் திரும்பிப் பட்டென்று தன் மகனை அடித்தாள். எல்லா பிள்ளைகளும் வாயடைத்து நின்றன. "இனிமே அடிப்பயா?"

அந்தப்பையன் அழுதுக்கொண்டே தலையசைத்தான். "எல்லாரும் சேர்ந்து விளையாடுங்கள். மறுபடியும் அவன் அடித்தால் என்னிடம் சொல்லுங்கள். ஆனால் வளையாட்டுல செர்த்துக்கணம், சரியா?" என்று சொல்லி அந்தத்தாய் தன் பொறுப்பை நிறைவேற்றின திருப்தியில் தன் வேலைகளை கவனித்தாள்.

அடித்து "அடிப்பது தவறு" என்று கற்றுக்கொடுக்கும் இந்தத்தாய் வாழ்க.

Saturday, July 14, 2012

தனிமையும் சந்தேகங்களும்

இன்று டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு செய்தி - பல படித்தப்பெண்கள் இல்லத்தரசியாக மட்டும் இருக்க கட்டாயப்படுத்தப்பட்டு, அந்த வாழ்க்கை கசந்துப் போய் தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்று. மேலோட்டமாக பார்த்தால் இப்படிப்பட்ட பெண்களை பார்த்து கோவம் தான் வரும். ஆனால் யோசித்துப்பார்த்தால் பரிதாபமாகவும் இருக்கிறது.

மணமாகிய முதல் பல வருடங்களில் பொறுப்புகள் இருக்கும் - அது உண்மையே. ஆனால் முன் மாதிரி அதுவே வாழ்க்கை ஆகும் அளவிற்கு இல்லை. நவீன உபகரணங்கள், தனி குடுத்தனம் - வீட்டு பொறுப்புகளை ஒரு விதத்தில் சுலபமாகி விட்டன. தனிமையும் தான் அதிகரித்துவிட்டது. அதனால்   தானோ என்னமோ, துணிமணி வாங்குவதே சில பெண்களுக்கு பொழுதுபோக்காகி விட்டது. அப்படி செய்ய முடியாதவர்களோ அல்ல விரும்பாதவர்களோ மனதை தளரவிட்டு வாழ்க்கையையே துறந்துவிடுகிரார்கள்.

தவறுதான். ஆனால் இதை தவிர்ப்பதருக்கு வழிகள் தேவை. வெறும் "இப்படிக்கூட செய்வார்களா" என்று கேட்பதில் ஒரு பயனுமில்லை. வெளியில் போய் வேலை செய்வது ஒன்று தான் வேலை இல்லை. வீட்டு வேலை மட்டும்  செய்வதில் மனதில் நிம்மதி இல்லை. அதனால் மற்ற கலைகள், திறமைகளையும் சிறிய வயதிலேயே வளர்க்க வேண்டும். அந்த திறமைகள் மனதில் நிம்மதியையும் கொடுக்கும், தன்னம்பிக்கையையும் வளரச்செய்யும். குழந்தைகள் இறக்கை முளைத்து கூட்டை விட்டு பறந்த பிறகு இந்த திறமைகளே கை கொடுக்கும்...  

Monday, July 2, 2012

மொபைல் போனும் நாமும்

ஒரு காலத்துல புத்தி சரியா இல்லாதவங்கதான் தனக்குத்தானே பேசிண்டு, சிரிச்சிண்டு போவாங்க. இப்போ தான் எவ்வளவு பிஸின்னு காட்டறதுக்கு இது ஒரு வழி. வாக் போனாலும் சரி, வண்டி ஓட்டினாலும் சரி, காதுல ஒரு வயற மாட்டிண்டு, கத்தி பேசினாதான் தனக்கு மதிப்புன்னு ஆயிடுத்து!

நடக்கரவங்க அப்படி பண்ணினா பரவா இல்லன்னு சொல்ல முடியாது... ஆனா அதுல மத்தவங்களுக்கு ஆபத்து கொறச்சல். வண்டி ஓட்டரவங்கள எவ்வளவு தான் எச்ச்சரிக்கறது! இந்த பேருந்து விபத்துக்கு அப்பறமாவது புத்தி வருமா? ஒரு பாலத்துக்கு மேலேந்து விழுந்தா அந்த பேருந்துல இருக்கறவங்களுக்கு மட்டுமில்ல, கீழே போறவங்களுக்கும் எவ்வளவு ஆபத்து!

சாதாரணமாவே பேருந்து ஒட்டறவங்க ரோடு தனக்காக மட்டும் தான் போலவும், மத்தவங்க கொசு மாதிரியும் நெனப்பாங்க. இப்போ தன்  வாழ்க்கைக்கே கூட முக்கியத்வம் கொடுக்கலையே!

இந்த மொபைல் போன் வந்ததுக்கு முன்னாடி நாம எல்லாம் வாழலையா? ஏன் இப்படி அடிமையாயிட்டோம் அதுக்கு?