Saturday, July 30, 2011

Tharaasaippola vaazhkkai - The Beam Balance

தராசைப்போல் வாழ்க்கையும்
போகும் மேலேயும் கீழேயும்

இதைவிட தாழ முடியாது
என்று வருந்தும் பொழுது

திடீர் என்று ஒரு மாற்றம்
வானை நோக்கி ஒரு ஏற்றம்

ஆஹா பறக்கிறோம் என்ற பொழுது
கீழே தள்ளப்பட்ட ஏமாற்றம்

இதை தாங்க நெஞ்சில்
தைரியம் எம்மாதரம்?

எதையும் ஏற்றுக்கொள்
என்ற தாரக மந்திரம்

ஒன்றே வாழ்க்கையில்
கொடுக்கும் நிரந்தரம்

Thursday, July 28, 2011

Lasting Impressions: Wholesome Venture

Lasting Impressions: Wholesome Venture: "I met her for the book 'Pathbreakers'. She had wanted to make it big in the IT world, but circumstances made her take a break, and then husb..."

Naduvaantharam - Middle Man

உலகத்தில் எவ்வளவோ பேர் எவ்வளவோ உருப்படியான வேலைகளை செய்து வருகிறார்கள்.

சிலர், மற்றவர்கள் காட்டும் வழியை பின் பற்றுகிறார்கள்.

சிலருக்கு எந்த கவலையுமே இல்லாமல் எப்பவும் போல இருக்கிறார்கள்.

நான் இந்த எந்த வர்கத்திலேயுமே சேராத ஒரு நுடுவான்தரம்.

பூமியை காக்க வேண்டும். நடக்கும் தீமைகள் ஒழிய வேண்டும். நல்ல பண்புகள், வழிகளை கடைபிடிக்க வேண்டும் என்று துடிக்கேறேன்.

ஆனால், இறங்கி வேலை செய்ய தயங்குகிறேன்.

அதை மறைக்க இப்படி ப்ளாக், செய்தித்தாளில் செய்திகள் என்று எழுதி என் குற்ற உணர்வுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து நானே சந்தோசப்பட்டுக்கொள்கிறேன்.

ஆனால் இன்று என்னையும் ஏமாற்றிக்கொள்ள முடியவில்லை. :( அவரவர் வேலையில் காட்டுகிறார்கள், நீ என்ன பெரிய வழிகாட்டியா என்று என் மனம் என்னை கேட்கிறது. இதற்க்கு எப்படி பதில் சொல்வது என்று தெரியாமல் முழிக்கிறேன்.

Tuesday, July 26, 2011

Lasting Impressions: Keeping a Watch Every Moment

Lasting Impressions: Keeping a Watch Every Moment: "Today Hindu Metro Plus has an article on Child Sexual Abuse. As the writer rightly points out - Nov 19 is not World Day for Prevention of CS..."

Saturday, July 23, 2011

Santhi Nilava Vendum - May Peace Reign

கீழே போய் விளையாடு என்று சொல்வதற்குக்கூட தாய்மார்கள் பயப்படுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சில பிரச்னைகள் மேற்க்கத்திய நாடுகளில்தான் நடக்கும் என்று ஏளனமாக சிரிப்பது கூட உண்டு. நம் கலாசாரம், குடும்பத்தில் ஈடுபாடு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்லப் பண்பு- இவைத்தானே எல்லா தாய்களின் குறிக்கோளும் என்று நான் நம்புவதும் கூட!

ஆனால், செய்தித்தாள்களில் வரும் செய்திகளைக்கண்டால் யார் இந்த அரக்கர்கள் - சிறு கொழந்தைகளுடன் தவறான உறவு வைத்துக்கொள்ள எப்படி மனம் இடம் கொடுக்கிறது? எப்படி அவர்களை ஒரு பொம்மைப்போல கொன்று தூர எரிந்து விட்டு செல்ல முடிகிறது? முதியோர்களை கட்டிப்போட்டு, அவர்களை கொன்று, அவர்களிடமிருப்பதை பறிக்க மனம் வருகிறது?

என்ன, உலகம் புரியாத மக்காக இருக்கிறேன், வெகுளி என்று நினைக்கிறீர்களா? எனக்குள் துடிப்பது ஒரே சிந்தனையே. மறுபடியும் பழைய பழக்க வழக்கங்கள், நிம்மதி தரும் அமைதியை நான் மட்டும் தேடிச்செல்லாமல் மற்றவர்களையும் அழைத்துச்செல்ல வேண்டும் என்று. என்ன, முன் காலத்தில் மட்டும் இதெல்லாம் இல்லையா என்று தெரியாதா? இருக்கலாம். இல்லாமல் இருந்தால் காவல், ராணுவம் என்றெல்லாம் இருந்திருக்காது. ஆனால், இன்று பிரச்னைகள் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. மனதில் நிம்மதி குறைவதனால் இப்படிப்பட்ட விபரீதமான சிந்தனைகளும் அதிகரிக்கின்றன.

சாந்தி நிலவ வேண்டும் - கவி பாடியது பொய்யாகக்கூடாது... அதற்க்கு என்ன வழியோ அதை செய்ய நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கோம்.


Thursday, July 21, 2011

Lasting Impressions: The Beast Emerges

Lasting Impressions: The Beast Emerges: "Godzilla, he is not Neither ugly nor fearsome Not emerging from deep seas Nor from the belly of the earth He walks this world Looks li..."

Tuesday, July 19, 2011

தன்னம்பிக்கையே சுய தொழில் செய்வதற்கும் அதில் வெற்றி பெறுவதற்கும் வழி காட்டுகின்றன. ஐம்பது சுய தொழில்களை ஆரம்பித்த முதலாளிகளை சந்தித்தப்பொழுது பல விஷயங்கள் ஹா என்று வியப்பை உண்டாக்கின. தோல்விகளும், நெருக்கடிகளும், எதிர்ப்புகளும் வாழ்க்கையில் மிக சகஜம். அதையும் மீறி வருபவர்கள்தான் இந்த பயணத்தை தான் நினைத்தப்படி நிர்வாகித்துக்கொள்கின்றனர்

Sunday, July 17, 2011

Lasting Impressions: An Eye-Opener

Lasting Impressions: An Eye-Opener: "It was the shortest possible deadline I faced, and the question - 'am I mad to take it up?' - rang in my head. But unless you try, how do yo..."

Iru Mugangal

ஒன்று வெளியுலகம் பார்க்கும்
சிரிக்கும், பொலிக்கும்,
யாவையும் கண்டும் காணாமல்
ஒன்றும் அகாததுப்போல் நடிக்கும்
 
இன்னொன்று உள்ளிருட்டில்
தத்தளித்து, தவிப்பில்
இங்கும் அங்கும் ஓடி
எல்லாவற்றிற்கும் தேடும் பதில்
 
இதற்க்கு நடுவில் இருக்கும்
பாதையில் நடக்கும்
ஒரு சிலருக்கே கிடைக்கும்
சுகமான ஒரு முகம்

Thursday, July 14, 2011

Lasting Impressions: Sizzling and Hissing

Lasting Impressions: Sizzling and Hissing: "Yet another shaft Finds its mark In the heart's centre All hopes shatter As the arrow Pierces the armour Only a tiny pain No blood? ..."

Wednesday, July 13, 2011

Arakkargalin Rajyam

ஒரு இலட்சியத்திற்காகத்தான் நாங்கள் பாடு படுகிறோம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் லட்சியம் இருந்தால் நல்ல வழியை தானே காட்டும். காட்டுமிராண்டித்தனமாக நடந்துக்கொண்டால்?
 
மனிதர்களுக்குள் எப்படி இந்த அரக்கத்தனம் எழுகிறது? ஏன் சம்மந்தப்படாத  உயிர்கள் மீது பரிதாபமோ கருணையோ இல்லை? தான் நினைத்ததை எப்படியாவது அடைய வேண்டும் என்ற வெறி இப்படியா புத்தியை மட்டாக்கும்? இல்லை தான் கண்டறியாத சொர்கத்தை அடைய இப்படி ஒரு ஆர்வமா? ஜெஹாத் என்ற பெயரில் மக்களை அழிப்பது! இதை செய்தால் சொர்கத்திற்கு செல்வீர்கள் என்று இன்னொரு மனிதன்  தானே சொல்கிறான்? சொல்பவன் அந்த சொர்கத்தை கண்டு விட்டு வந்தான? தான் பின்னாடி இருந்து மற்றவர்களை முன்னே துப்பாக்கி குண்டுகள் போல் வீசி காணாமல் ஒளியும் கோழை பேச்சை கேட்ட இப்படி ஒரு ஆதங்கம் கிளம்புகிறது? அவனே ஒரு நல்ல வழி காண்பித்தால்?
 
அந்த கடவுள் தான் வழி காட்ட வேண்டும். ஆனால் இன்னொரு முறை மும்பையில் நடந்த வெடி குண்டு விபத்து நடக்காமல் தடுக்க யார் பொறுப்பு எடுக்க போறார்கள்? தீவிரவாதிகள், மக்களாட்சிக்கு இடையில் நடக்கும் போராட்டத்தில் சாதாரண மனிதன் அடிப்படுவதை யார் தடுக்க போறார்கள்? பேசாமல் நாமும் கையில் துப்பாக்கியை எடுத்துகொண்டு 'சுடு முதலில், கேள்வி கேள் பிறகு' என்று இருந்து விடவேண்டியது தான்.

Lasting Impressions: The Parking Ticket - Short Story

Lasting Impressions: The Parking Ticket - Short Story: "She was late to pick up her children. She rushed out with just her her wallet and her car keys. On reaching the school, she found the road..."

Tuesday, July 12, 2011

Maadu pola manithan - kavithai

கழுத்தை நெருக்கியது வேலை
அது இல்லை என்றால் மட்டும்?
சொல்லுவோமா, நல்ல வேளை?
ஓடி ஆடி திண்டாடி
இங்கும் அங்கும் வேலையை தேடி
அலைந்து திரிந்து மன்றாடி
ஒரு வழியாக களைத்தோடி
எதோ வேலையை பிடித்து
வேலை பிடிக்காமல்
இருந்தாலும் சிரித்து
நம் வாழ்க்கைக்கு
அதில் அர்த்தம் தேடும்
அற்ப ஜீவிராசிகளுக்கு
உணர்த்தும் வகையில்
எடுத்து சொல்ல
ஒன்றும் உணராத
மாட்டை போல
சந்தோசம் எதில் என்று
தெரியாமல் போக
வட்டத்தில் சிக்கி இருக்கிறீர்கள்
என்று சொன்னால் மட்டும்
புரியும் என்று நீங்கள்
கருதிச்சொன்ன வார்த்தை
மேலே விழுந்ததை பார்த்தே
பார்க்காமல் போகும்
ஆறறிவு படைத்த மனிதர்களே

Sunday, July 10, 2011

Lasting Impressions: Toothbrush in the Bathroom

Lasting Impressions: Toothbrush in the Bathroom: "This is in public interest. Since I have noticed this in many houses, I am making a post of this (and escaping thinking too deep). Whether..."

Saturday, July 9, 2011

Ippadiyum Silar

என்னடா இன்னும் ஒரு முறைக்கூட நான் வேலைக்காரியைப்பற்றி எழுதவில்லை என்று நினைத்தீர்கள் என்றால், கவலை வேண்டாம். இதோ, எழுதப்போகிறேன். ஆனால் அவள் லீவுப்போடுவதைப்பற்றியோ, வேலை சரியாக செய்யாததைப்பற்றியோ இல்லை.
 
மற்ற வேலை செய்பவர்களைப்போல், இவளும் படிக்காதவள். மூன்று பெண்கள், இரு பிள்ளைகள். பெண்களை படிக்க வைக்க வில்லை, பிள்ளைகளில் ஒருவன் படித்திருக்கிறான். ஒரு மகள் வெகுளி, இருமுறை மணம் செய்தும் தாயுடன் இருக்கிறாள். அவளுக்கு ஒரு மகள்.   இரண்டாவது மகளுக்கும் ஒரு மகள் சமீபத்தில் பிறந்தது.
 
அட, என்னடா இவள், அந்த குடும்பத்தைப்பற்றி ஏன் எழுதுகிறாள் என்று யோசிக்கிறீர்களா?  
 
நீங்கள் கவனித்தீர்களா என்று தெரியவில்லை, ஆனால் அவள் குடும்பத்தில் பெண்கள் எண்ணிக்கையே அதிகம். அவள் ஒரு விதவை. ஆனால் ஒரு நாளும் அவள் எப்படி இவர்களை கரை சேர்க்கப்போகிறேன் என்று யோசித்ததில்லை. மகன் மகள் இருவரைப்பற்றியும் ஒரே கவலைத்தான் - சரியான வழியில் செல்கிறார்களா என்று.
 
குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை. குறையே இல்லாத வேலை ஆட்களும் இல்லை. ஆனால் பெண்கள் ஜனத்தொகை குறையும் இந்த காலத்தில் அவளை பார்க்கும் பொழுது நான் யோசிப்பது ஒன்றே - பெண் வேண்டாம் என்று சொல்பவர்கள் யார்? படிக்காதவர்கள் என்று ஒரே வார்த்தையில் சொல்லி விட முடியாது. வேறு ஏதோ ஒன்று இருக்கிறது. அது என்னவென்றுதான் புரியவில்லை. 
 

Friday, July 8, 2011

Lasting Impressions: Inheritance: A Short Story

Lasting Impressions: Inheritance: A Short Story: "'Where are you going?' mother asked. 'Don't keep nagging him!' father intervened. 'Where are you going?' he asked. The tone was different,..."

Wednesday, July 6, 2011

Lasting Impressions: Two Drops, One for Each

Lasting Impressions: Two Drops, One for Each: "It is strange The eyes are wet Not a cross word Has passed the lips, yet Just the thought Of those little ones Struggling to learn T..."

Tuesday, July 5, 2011

உருகும் மனம்

 அலை எழும்பி ஓய்வது போல்
நிலைக்கும் அந்த மௌனம்
குழந்தைகள் கிளம்பி போன பின்னே
திரும்பும் வேளையில் கலக்கும் நெஞ்சம்
எல்லாம் சரிதானே?

சிரித்துக்கொண்டே வருகையில்
நம்மை அறியாமலேயே ஒரு பெரு மூச்சு
ஆனால் வீட்டில் நுழைந்ததும்
ஒரே சத்தம், காச்சு மூச்சு
இதுவும் மகிழ்ச்சித்தானே?

போரும் நிறுத்து, என்ற ஒரு அதட்டல்
அதையும் மிஞ்சினால் மிரட்டல்
எத்தனை நேரம் என்ற கூச்சல்
எல்லாம் மிஞ்சிய விளையாடல்
இது நடப்பதுதானே?

கீழே போய் விளையாடு என்று அனுப்பி
மறுபடியும் அந்த மௌனத்தை ரசித்து
ஓய்வு எடுக்கும் வேளையில் ஒரு குரல்
மகனோ மகளோ அழுவது
இது வேதனைதானே?

அரக்க பறக்க ஓடும் நீ தாய்
உன் மக்களை ஓடி அணைப்பாய்
என்ன என்று கண் துடைப்பாய்
எவன் அவன் என்று எழுந்து நிற்ப்பாய்
உன் மனம் உருகுவதுனால்தானே?



Monday, July 4, 2011

Lasting Impressions: The Flowers

Lasting Impressions: The Flowers: "A gardenful of flowers Uniformly pink With hues of gold Embellishing from within Petals open The pollen exposed Watching the sun Cros..."

Sunday, July 3, 2011

EMI Thollai - sirukathai

நிர்மலா மௌனமாக அவள் கணவன் பார்த்திபன் பேசுவதை கேட்டாள். அவன் சொல்வதிலும் நியாயமிருந்தது. இருவருக்கும் கல்யாணமாகி இரு வருடங்கள் தான் ஆகி இருந்தன. வயதும் முப்பதுக்கு குறைந்தது. என்ன அவசரம் இப்பொழுது, குழந்தைக்கு?

"கார் வாங்கி மூன்று மாதம தான் ஆகியிருக்கிறது நிம்மி," என்று பரிவாக நினைவூட்டினான். "வீடு வாங்கற பிளான் வேற..."

தலை குனிந்தாள். "வீடு பிறகு கூட..." என்று மெதுவாக சொன்னாள்.

"ஈ.ம.ஐ. அதிகம் பே பண்ண வேண்டி இருக்கும். அப்புறம் படிப்பு செலவுக்கு ஒண்ணுமே இருக்காது. உன்னாலயும் வேலைக்கு போக முடியாது, இல்லையா? நான் ஒருவன் சம்பாதிப்பது எப்படி போரும்?"

யோசித்துப்பார்த்தால் அவன் சொல்வது சரிதான். குழந்தை பிறந்தபிறகு, அவள் அலுவலகத்தில் வேலை செய்யும் நித்யாவைப்போல திண்டாடகூடாது என்று அவள் தீர்மாநித்திருந்தாள். அந்த குழந்தை பள்ளியிலிருந்து திரும்பும் நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள். உடம்பு சரியில்லை என்றால் நித்யா படும் வேதனை! அப்பா! பார்க்கிரவர்களுக்கே அனுதாபம் ஏற்படும். அவளும் இப்படித்தான், ஈ.ம.ஐ. தொல்லையினால் வேலை செய்தே ஆக வேண்டும் என்ற நிலமை. வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதியும் இல்லை. இவ்வளவு படித்து வீணாக்கவும் இஷ்டமில்லாமல் முழித்துக்கொண்டிருந்தாள்.

 **

அலுவலகித்திர்க்குள் நுழையும்பொழுதே கண்மணி தான் கண்ணில் பட்டாள். அவள் இந்த அலுவலகத்தில் வரவேற்பாளராக பணி  புரிந்தாள்.

"என்ன கண்மணி,  ரொம்ப நாளா ஆளை காணோம்?" என்று கேட்டப்படி நிர்மலா ஜிச்டரில்  சய்ன் செய்தாள்.

சிரித்துக்கொண்டே கண்மணி சொன்னாள், "அமாம் மேடம், உடம்பு சரியாக இல்லை."

என்ன என்ற பாவனையில் நிர்மலா அவளை ஏறிட்டாள்.

"மாசமாக இருக்கிறேன்" என்று கண்மணி முகம் சிவக்க கூறினாள்.

ஹா! என்று இருந்தது நிர்மலாவிற்கு. "கல்யாணமாகி ஆறு மாதம் தானே ஆகிறது?" என்று கேட்டே விடடாள்.

"அமாம்," என்று தலை ஆட்டினாள் கண்மணி. "சீக்கிரமா இந்த வேலையெல்லாம் முடித்துக்கொள். வயதாக ஆகா கஷ்டப்படுவாய்ன்னு அம்மா சொன்னாங்க."

"என்ன கஷ்டம்?" என்று நிர்மலா கெட்டாள்.

"அதுங்க பின்னாடி ஓடி ஆடறது எல்லாம் சரமமாக இருக்கும். முப்பதுக்குள்ள பெத்துண்டா அதெல்லாம் சௌகரியமாக இருக்கும். அதுங்க பள்ளி போக ஆரம்பிக்கற வேளைல  நாம வேலை பார்க்க களம்பலாம். வேலை கூட சுலபமா கடைக்கும், இல்லையா?"

"ஒண்ணும் வாங்க முடியாதே? ஈ.ம.ஐ.க்கு என்ன செய்வே?"

"நம்ப வசதிக்கு ஏற்றதா வாங்க முடியாதா என்ன?" என்று அவள் துணுக்காக பதிலுட்ட்றாள். "செலவ கோரச்சிண்டு, சேமிச்சா எல்லாம் முடியம் மேடம்," என்று அவள் தையிரியமாக சொல்லும் பொழுது நிர்மலாவுக்கு ஏதோ மாதிரி இருந்தது.

நம்மை விட குறைந்து படித்த இவளுக்கு இருக்கும் தைரியம், விவேகம் கூட நமக்கில்லையே என்று. அகலக்கால் நீட்டுவது தேவைதானா என்று மனம் கேட்ட கேள்வியை அப்படியே அடக்கினாள். இது அவள் மட்டும் எடுக்கும் முடிவல்ல. பார்த்திபனின் தகுதிக்கு கொடுக்கும் மரியாதையும் கூட என்று தனக்குத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு அவள் தன வேலையை கவனித்தாள்.






Lasting Impressions: Taller, Stronger, Sharper

Lasting Impressions: Taller, Stronger, Sharper: "This is like the genetically modified brinjal. We debate about it no end, but don't worry that we are playing with our children's hormones. ..."

Saturday, July 2, 2011

Lasting Impressions: From Darkness to Light

Lasting Impressions: From Darkness to Light: "There was scarcity Of food, water, comforts Roads were narrow So were the minds The rich grabbed The poor envied Eyes were on others ..."

Ayyo paavam, kadavul

என்ன நினைத்தாய் நீ
மனிதனை படைக்கும் பொழுது

உன்னைப்போல் ஒருவன்
உன் உருவம், உன் குணம்

என்றெல்லாம் திட்டமிட்டு
ஆறறிவையும்  கொடுத்து

நிறைய வளமும் கொடுத்து
இந்த பூமியில் திரிய விட்டு  

கூடவே ஒரு முள்ளையும் 
வைத்து தைத்து 

இது போறாது, இன்னும் வேண்டும்
என்ற ஒரு வெறி, சிறிய பொறி

ஆரம்பித்து, இன்று அது
ஒரு பெருந்தீயாய் வளர்ந்து

நீ படைத்த பூமியை எரித்து
தன்னையும் வாழ விடாமல்

மற்றவர்களையும் எரித்து
தூள் தூள் ஆக பறக்கவைக்கும்

இந்த முள், மனதை thulaitthu
திருப்தியை அழித்து

இந்த சிறிய முள், இதை தைத்த நீ
பாவமாகத்தான் தெரிகிறாய்

இல்லையே! நான் என்ன செய்தேன்?
ஏதொ, நாளடைவில்

அவனாகவே உரு எடுத்து
அவனாகவே வளர்ந்துவிட்டான்

அடக்கடவுளே, இந்த பேயை
அழிப்பதெப்படி என்று நினைக்கிறாயா?

இல்லை, தானே தன்னை அழித்து
ஒட்டுமொத்தமாக ஒழியட்டும்

என்று காத்துக்கொண்டிருக்கிறாயா?
எல்லாம் வல்ல இறைவனே