Saturday, February 25, 2017

இக்கரைக்கு அக்கரை - II

ருக்கு மனதில் அலைப்பாய்ந்தது . அவன் காதலித்தவளைத் திருமணம் செய்துக் கொள்ள முடியாததற்காக வருந்துவதா, தன்னிடம் மறைத்ததற்காக கோபப்படுவதா, இல்லை தன்னை ஏமாற்றிவிடுவானோ என்று பயப்படுவதா?
பதினோரு வருடங்கள் பட்டாபியுடன் குடும்பம் நடத்தின அவளிடம் இவ்வளவு பெரிய விஷயத்தை அவன் மறைத்திருக்கிறான். தனக்கு அதைப்பற்றி சந்தேகம் கூட எழவில்லையே?

Tuesday, February 21, 2017

இக்கரைக்கு அக்கரை - I

"ருக்கு, ரெடியா? எனக்கு ஆஃபீஸுக்கு லேட்டாகிறது," பட்டாபி குரல் கொடுத்தான்.

"வந்துட்டேன்னா," என்று பையையும், 10-வயது மகள் சுமித்ராவையும் அழைத்துக்கொண்டு பரபரப்புடன் வந்தாள் அவள். "வரேன் மா," என்று மாமியாரிடம் விடைப்பெற்றுக்கொண்டாள்.

Friday, February 10, 2017

பூ கிளப்பிய புயல்

..
"பெண்கள்  பூ போல, புஷ்பா, மென்மையானவர்கள் " அவள் தந்தை சோமசேகரன் சொன்னது அவளுக்கு நினைவிற்கு வந்தது. தினம் ஸ்வாமிக்கு பூஜை செய்யும் பொழுது  அது நினைவிற்கு வரும். கண்களில் இரு நீர் துளிகள் தேம்பி நிற்கும். "அவர்கள் செல்லும் இடமெல்லாம் நறுமணத்தை பரப்ப வேண்டும்... அது தான் பெண்களுக்கு அழகு..."

Friday, February 3, 2017

கைக்கட்டு

கட்டில் தொங்கிய தன் கையைப் பரிதாபத்துடன் பார்த்தான் செல்வம். கும்பல் நிறைந்த பஸ்ஸில் ஏற பயமாக இருந்தது. உடைந்த கை, யாராவது தெரியாமல் தள்ளி விட்டாலும் மேலும் காயம் படும்... அந்த வலியை நினைத்தாலே! அப்பப்பா!!!