Sunday, June 17, 2018

வரம்புகள்

"டேபிளை ஒழிச்சிடு," என்று நாகலட்சுமி தன் மகள் ராதாவிடம் கூறும்பொழுது, மகன் கிட்டாவும் தொடர்ந்தான். நாகலட்சுமியின் தங்கை வனஜா தன் மகள் காமினிக்கு சைகை செய்தாள், "நீயும் ஒத்தாசை செய்," என்று. 

வனஜாவின் மகன் பிரபு எழுந்து, தன் போனை நோண்டிக்கொண்டே வாச உள் பக்கம் நடந்தான். "வாயேன் பிரபு, நீயும் உதவலாமே," என்று நாகு அவனை அழைத்தாள். காதில்  விழவில்லையோ  இல்லை விழாத மாதிரி நடித்தானோ, தெரியவில்லை; சோஃபாவில் அமர்ந்து காதில் இயர் போன்ஸ் மாட்டிக்கொண்டு வெளி உலகுடன் தொடர்பை துண்டித்தான்.