Wednesday, August 24, 2011

Oru thaai pillai

ஒரு தாய்க்கு பிறந்த பிள்ளைகள்
ஒரே வீட்டில் வளர்ந்தவர்கள்
கூட சேர்ந்து விளையாடியவர்கள்
குத்துச்சண்டை போட்டவர்கள்

தாய் தந்தையிடம் மாட்டி வைத்து
அவர்களுக்கு தெரியாமல் காப்பாற்றியவர்கள்
எவனாவது வம்பு சண்டைக்கு வந்தால்
சேர்ந்து நின்று எதிர்த்தவர்கள்

வழிகாட்டியாக பெரியவனும்
உயிரை கொடுக்க சிறியவனும்
தாய்ப்போல் பார்த்துக்கொள்ளும் பெரியவளும்
பிள்ளைப்போல் அன்பை பொழியும் சிரியவளும்

வளர்ந்து ஆளாகி தத்தம் வழியில் 
மணமும் செய்து தன் வாழ்க்கை அமைத்து
தன குடும்பம் பெருக பழசை துறந்து
புது வாழ்வில் ஒன்றி தன்னை மறந்து

நீ யார் கேக்க, என்று பகைமை கொண்டு
உயிர்கொடுப்பவன் உயிரை எடுத்து
போடி நீதான் எப்பவும் செல்லம்
தாயாகிருன்தவள் குறையை கண்டு

ஒரு குடும்பமாக இருந்தவர்கள்
வீட்டை பிளைக்க காரணம் கண்டு
நீயும் நானும் வேறு வேறு
என்று தத்தம் வழியை கண்டு கொண்டு

தாயை வதைத்து, அது கண்ணை மறைத்து
தாயே எதிரியாகு நிற்கும் பொழுது
ரத்த கண்ணீர் வழிவதை கண்டு
துடைப்பது யார், நீயா நானா?

1 comment: