Friday, October 26, 2012

இது ஒரு டைம் பாஸ்

"சாரி, நாங்க ஆரம்பிக்க லேட் ஆயிடுச்சு. ஆனா நீங்க சீக்கரம் முடிச்சிடறீங்களா?" என்று அந்த நடன நிகழ்ச்சி தலைவர் வந்து கூறும் பொழுது, அவனுக்கு ரொம்ப கோவம் வரத்தான் செய்தது. ஆனால் பல்லைக்கடித்துக்கொண்டு சரி என்று தலை ஆட்டினான். இதுதான் எல்லா இடங்களிலும் வழக்கமாக ஆயிற்றே!

நிகழ்ச்சிக்கு ஒரு மாதம் முன்னாலிருந்து - "ஒரு மணிநேர கச்சேரி, 12 பேர்களாவது ஆட வேண்டும்... ஒரு 8 பாட்டுகள் இருக்குமா? கொஞ்சம் கிளாச்சிக்கல், கொஞ்சம் விறுவிறுப்பா சில பாட்டுகள் - இப்படி நல்ல ஒரு மிக்ஸ் இருக்கட்டும்," என்றெல்லாம் வறுத்தி எடுப்பார்கள். பிறகு, "ஆடுபவற்கள் எல்லாம் ப்ரொபெஷ்னல் தானே? ஓஹ்! இவ்வளவு கட்டுப்படியாகாதே! கொஞ்சம் கொறச்சுக்கொங்க! ஆனா 8 பாட்டாவது வேணும்... சரிதானே?" என்று பேரம் பேசுவார்கள். "அப்பொறம், உடை, ஆபரணமெல்லாம் புதுசா, பளிச்சுன்னு இருக்கணம்... சரியா?" இப்படி வேற ஒரு கவலை.

"அண்ணா! கால் சுளுக்கின்றிச்சு அண்ணா!" என்று ஆடுபவர்களில் ஒருவன் திடீரென்று ஜகா வாங்குவான். "ரொம்ப ஜுரம் அண்ணா..." என்று ஒருத்தி மூக்கை உருஞ்சுவாள். எப்படியோ ஒன்று, எல்லாரும் தயாராக நிற்கும் வேளையில், பார்பவர்கள் மெதுவாக, ஆடி அசைஞ்சு வந்து சேரும் வேளையில் நிகழ்ச்சி நடத்துபவர் மணிக்கட்டைப்பார்த்துக்கொண்டே - "சில பாட்டுகளை கட் செஞ்சிடுங்க. அடுத்தது சாப்பிட போவாங்க, பசிக்குதாம்" என்றும் பொழுது இதை ஞாபகப்படுத்தி, தானும் தன் குழுவும் கஷ்டப்பட்டதை ஒரு மாசம் ஒழைச்ச்சதை நினைத்தால் ச்சே என்றாகி விடும். முடிந்தவுடன், "அடடா, கிளாச்சிகால் பீஸ் இன்னும் ஒன்னு இருந்திருக்கலாமே," என்று வேற வேதனைப்படுவது போல ஒரு பாவனை!

அவனுடை நேரத்திற்கும் உழைப்பிற்கும் மதிப்பு இவ்வளவுதானா என்று தோணும். கலை என்ன ஒரு வெறும் டைம் பாசா என்றுக்கூட வெறுத்துப்போகும். ஆனால் பிழைப்பதற்கு இது ஒரே வழி... இதை தெரிந்துதானே இந்த வழியை நாம் மேற்கொண்டோம் என்ற விவேகம் அவனை இதை பொறுத்துக்கொள்ள செய்கிறது!

No comments:

Post a Comment