Monday, March 11, 2013

வாழ்க்கை பந்தயம்

வண்டி மோதியதும்தான் அவன் கண் விழித்துக்கொண்டான். ஆனால் அதற்குள் அவனுடைய பிராணம் அவனை விட்டு விலகியது. திறந்தது உடலுடன் இருக்கும் விழியா அல்ல பிரியும் ஆவியின் கண்களா என்று அவனுக்கு சிறிதுநேரம் புரியவில்லை.

நினைவு பிரிந்தது.

நினைவு திரும்பும் பொழுது தலையில் கட்டு தெரிந்தது. எதிரே மனைவி. கண் அயர்ந்திருந்தாள். மெதுவாக எல்லாம் புலப்பட்டது. ஒரு கணமே கண் மூடியிருக்க வேண்டும். ஆனால் மறுகணமே எதிரே போகும் பெரிய வண்டி மீது அவன் போய் மோதியிருக்க வேண்டும். அவ்வளவு வேலை களைப்பு .

கண் மூடினான். இப்பொழுது கூடு வேலை என்ற வார்த்தை மனதில் களைப்பைதான் உண்டாக்கியது. எவ்வளவோ வேலைகள் இன்னும் முடிக்க வேண்டியது இருக்கு. இப்படி படுத்துக்கிடந்தால் என்ன லாபம்? எழுந்துக்கு முயற்சி செய்தான்.

மனைவி கண் முழித்தாள். அவனிடம் சட்டென்று வந்து, "எதாவது வேண்டுமா" என்று கேட்டாள். அவன் தலையசைத்து மறுபடியும் கண்களை மூடிக்கொண்டான்.

மனைவி இங்கு வந்திருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக தான் இருந்தது, ஆனால் ஆறுதலாகவும் இருந்தது. இந்த வேலையினால் அவனுக்கும் அவன் மனைவிக்கும் நடுவில் மனத்தாபம் தான் அதிகமாயிருந்தது.

ஒரு மாதம் கழித்து, மனைவியின் கனிவான பராமரிப்பில் உடல் குணமாகி அலுவலகத்திற்கு திரும்பும் பொழுது ஒரு சின்ன அதிர்ச்சி. அவன் இல்லாத பொழுதிலும் அலுவலகம் இழுத்து மூடப்படவில்லை. அவனுடைய வேலையை வேறு யாரோ மிக நன்றாகவே செய்திருந்தார்.

உன் தோளில் தான் இந்த அலுவலகமே நடக்கிருதா என்று மனைவி இடித்து கேட்ட பொழுது எவ்வளவோ கோபப்பட்டிருக்கிறான். ஆனால் இன்று தான் ஒரு வெறும் கருவி தான், காரணகர்த்தா இல்லை என்று தெரிந்ததும் இத்தனை நாள் தன் வாழ்க்கையை வீணடித்திருக்கிறோம் என்று புலப்பட்டது. ஆனால் தன்னை ஒதுக்கிவிடப்போகிரார்கள் என்ற பயத்தில் அவன் மீண்டும் தன் திறமையை நிரூபிக்க வெகு தீவிரமாக முற்பட்டான்.

No comments:

Post a Comment