Saturday, February 23, 2013

வலது காலின் மஹிமை

முதல் முறையாக ஒரு வீட்டிற்குள் அடி எடுத்து வைக்கும் போது வலது கால் வைத்து வரச்சொல்வது நமது பண்பாடு. என் ப்ளாக்கின் பெயர் வலதுகால் என்று வைத்ததற்கும் அது தான் காரணம். தமிழ் ப்ளாக் என்ற உலகிற்குள் பிரவேசிக்கும்போது வலதுகால் எடுத்து வைப்பதாக எண்ணிக்கொண்டு அப்படி என் ப்ளாகிற்கு பெயர் வைத்தேன். என்னை பல பேர் அந்த பெயருக்கு காரணம் கேட்டதுண்டு.
போன வாரம், நான் ஒரு தமிழ் வாத்தியாரிடம் என் ப்ளாகை படிக்க சொல்லி பெயர் சொல்லும்பொழுது அவர் கேட்ட கேள்வி என்னை வியக்க வைத்தது. என்னையும் அறியாமல் இந்த பெயர் எனக்கு வேறு விதத்திலும் பொருந்தும் என்று அறிந்து கொண்டேன்.
அவர் மதுரைக்காரர். இதிலேயே யூகித்துக்கொண்டிருப்பீர்கள் - மதுரையில் சொக்கேஸ்வரர் வலது காலை தூக்கி ஆடுவார் இல்லையா? அவர் நான் அதை மனதில் வைத்துதான் இந்த பெயர் சூட்டினேன் என்று நினைத்துக்கொண்டு என்னை கேட்டதும் மெய் சிலிர்த்துப்போனேன். நான் நடனம் ஆடுவதால் இப்படி பெயர் வைத்தேன் என்று அவர் நினைத்துக்கொண்டு இது ரொம்ப நல்ல பொருத்தம் என்று பாராட்டினார்.
நம்மையும் அறியாமல எத்தனை விஷயங்கள் நமக்கு ஒன்று கூடிவிடுகின்றன!

No comments:

Post a Comment