Wednesday, November 16, 2011

இப்படியும் ஒரு ஆசை


மேம்பாலம் திறப்பு விழா. அந்தத் தெருவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை அன்று காலை. காலை நேரத்தில் இந்த உபத்த்ரவமா என்று மக்கள் மத்தியில் அலுப்பு. தட்டிக்கேட்க யாரால் முடியும், என்ற சலிப்பு. தட்டிகேட்க நேரமும் இல்லை, கேட்டு செயல் பட ஆட்களும் இல்லை.

இந்த பாலம் கட்டுவதற்கு பல லட்சங்கள் செலவழிந்ததாக பேச்சு. கட்டுவதற்கா இல்லை யார் குடும்பமோ பிழைப்பதற்கா என்று ஒரே நக்கல். எப்படியோ ஒன்று, இத்தனை நாள் அந்த சாலை பயனில்லாமல் இருந்தது. இனி பார்ப்போம், இந்த மேம்பாலத்தினால் என்ன பயன் என்று ஒரு ஆர்வம்.

திடீறன்று ஒரே பரபரப்பு! என்னப்பா, திறந்தார்களா?

ஆமாம், ஆனால் திறந்த உடனே எதோ விபத்து. எப் எம் போடு?


"மக்களே, இப்பொழுதே திறந்த மேம்பாலம், மந்திரியும் அவர் பாதுகாப்பு அணியினரும் அதை திறந்த பின் அதை கடந்து செல்ல, அந்த பாரம் தாங்காமல் அந்த மேம்பாலம் பொத்தென விழுந்தது என்று இப்பொழுதுதான் செய்தி வந்தது. மந்திரிக்கு காயமா என்று தெரியவில்லை."


ஊரே வாய் பொத்தி இருந்தது - கடவுளுக்கே போருக்க வில்லையா இவர்கள் செய்யும் அட்டூழியம்!

இப்படி எல்லா தவறுகளுக்கும் கண்ணெதிரில் தண்டனை கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!








No comments:

Post a Comment