Tuesday, November 22, 2011

இந்தகாலத்துப்பசங்க - II

அன்று முதல் பாகம் ஒரு புலம்பல். இன்று, பெருமை.

ஒரு பள்ளியில் (ஒமேகா) நேற்று நடனப்போட்டி. ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு பிரிவிலும் ஒரு குழு அமைத்து நாட்டுப்புற நாட்யங்கள் ஆட வேண்டும். அவர்களே பாட்டைத்தேடி, தானே அதற்க்கு நடனத்தை வடிவமைத்து, வேண்டிய உடையை தயார் செய்ய வேண்டும்.

முதலாக பத்தாம் வகுப்பினர் வந்தனர். ஆஹா என்று நானும் இன்னொரு ஜட்ஜும் வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தோம். அவர்கள்த்தான் நன்றாக ஆடினார்கள் என்றுப்பார்த்தால்,  இன்னும் கீழ் வகுப்புகளின் புதுமைகள் இன்னுமே இன்ப அதிர்ச்சியை கொடுத்தன!

இன்டர்நெட்டின் மகிமையை இங்கு நான் எப்படிச்சொல்லாமல் இருக்க முடியும்? அதைக்கண்டுத்தான் மெக்ஸிகோ போல நாடுகளின் நாட்யத்தை மட்டும் இல்லை, நமது நாட்டின் வெவ்வேருப்பகுதிகளில் இருந்தும் நாட்யங்களை ஆடின இந்த பசங்கள். போய் வந்து தலைவலியை எதிர்பார்த்த எனக்கு இது ஒரு பாடமாக இருந்தது.

No comments:

Post a Comment