Sunday, November 20, 2011

புள்ளிகள்

சேர்ந்திருந்தால் அழகான கோலம்
தனித்தனியாகவும் பார்க்க நேரும்
ஒரு ஜாலம் பின்னும் அற்புதம்
சிறியது பெரியது என்று பலவகையும்!

சிறிய புள்ளிக்கு என்ன கோவம்?
பெரிய புள்ளி ஆக வேண்டும் என்ற ஆர்வம்!
இப்படியும் ஒரு ஆர்வம் ஏநாம்?
உலகில் எல்லாப்புள்ளிகளும் தானே வேண்டும்

ஆனால் பெரிய புள்ளி போடும் சத்தம்
அப்பப்பா பூமி தாங்குமா இந்த யுத்தம்!
நீயா நானா என்று எப்பொழுதும்
மற்றவனை கீழே தாழ்த்தும் வேகம்!

இதை கண்டா ஏங்கும் இந்த மனம்?
மானம் காப்பாற்றி இருக்கும் நேரம்
சிறியது பெரியது என்று ஏன் இந்த வஞ்சம்
இருப்பதை நினைத்து திருப்தி படு நீயும்.



No comments:

Post a Comment