Saturday, April 14, 2012

நல்ல வேளை

"கடவுள் தான் காப்பாற்றினார். ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும்." ஒரு விபத்து நடக்கும் பொழுது அதில் பிழைத்தவர்களைப்பற்றி சொல்லக்கூடிய வார்த்தைகள் இவை.

அப்படி என்றால், இறந்தவர்கள் பாவம் செய்தவர்களா? கடவுள் கை விட்டு விட்டாரா? பிழைத்தவர்களுக்கு மரணமே இல்லையா? ஏதோ ஒரு வழியில் அந்த முடிவு எல்லாருக்கும் தான். இந்த விபத்தில் இல்லையென்றால், வேறொரு விதத்தில் சாவு நிச்சயம். பின்னே எதற்கு கடவுளை பிழைத்தால் மட்டும் இழுக்கிறோம்?

சில நேரங்களில் பிழைக்காமல் இருப்பதுகூட நல்லதுக்காக இருக்கலாம் அல்லவா? அந்த விபத்தில் இருந்து தப்பித்து வேறு பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளலாம். அப்பொழுது அதை எந்த கண்ணோட்டத்தில் பார்போம்?

எதற்கு இப்படி மண்டையை கொழப்பிக்கொள்கிறேன் என்று நினைக்கிறீர்களா? ஒவ்வொரு பெரிய சிறிய விபத்தில் பிழைத்தவர்களை பற்றி இப்படி பேசும் பொழுது தோணக்கூடிய சிந்தனை இது. இறந்தவர்கள் மட்டும் என்ன தப்பு செய்தார்கள்? ஏன் கொடூரமாக, மனதை திகிலடிக்கவைக்கும் இறப்பு அவர்களுக்கு என்று...

No comments:

Post a Comment