Friday, April 27, 2012

கலைக்கு மரியாதை

 நேற்று ஒரு நாட்ய நிகழ்ச்சியின் தொகுப்பாளராக சென்றேன். ஆறு மணிக்கு ஆரம்பித்து விடும், பன்னிரண்டு சிறிய சிறிய, வெவ்வேறு விதமான ஆட்டங்கள் இருந்தன. எல்லாமே விறுவிறுப்பாக இருந்தன. ஆடுபவர்களின் உழைப்பு அவர்கள் சிந்திய வேர்வையில் தெரிந்தது. இதில் ஆடுவது மட்டும் இல்லாமல், ஒவ்வொரு முறையும் உடை மாற்றம் வேறு. அந்த உடை மாற்றும் நேரத்தில் தான் நான் தொகுப்பாளராக அடுத்து வரும் ஆட்டத்தைப் பற்றி பேசுவேன்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க ஆறரை மணி ஆகி விட்டது. கடைசியாக ஒரு நடனம் இருக்கும் பொழுது நடத்துனர் வந்து "நேரமாகி விட்டது, சீக்கிரம் முடித்துக்கொள்ளுங்கள்" என்ற பொழுது கோபம் பொங்கி எழுந்தது. இதே அனுபவும் எனக்கும் ஒரு நிகழிச்சியில் நடந்தது. ஆறு மணி என்று சொல்லி ஆறரை ஆகியும் ஆரம்பிக்க வில்லை. பிறகு கடைசியில் தில்லானா ஆடுவதற்குள் முடித்துக்கொள்ள சொன்னார்கள்.

ஆடும் பொழுதும், பேசிக்கொண்டே இருப்பது, போனில் பேசுவது போன்ற விஷயங்கள் எல்லாம் நமக்கு பெருமையான விஷயங்கள் போல. ஒரு நிகழிச்சியில் பத்து நிமிடம் ஆடுவதற்கு கூட கிட்ட தட்ட அரை மணி நேரம் தினம் ஆடினால் தான் மேடையில் நன்றாக ஆட முடியும். அந்த முயற்சிக்கு ஒரு மதிப்பே இல்லாதது போல ஆகி விடுகிறது இந்த மாதிரி சில பேர்களுடைய நடத்தையை பார்த்து. இது அந்த கலைக்கு செய்யும் அவமானமில்லையா?

நேரத்திற்கு ஆரம்பிப்பது, நிகழ்ச்சி நடக்கும் பொழுது அமைதி காப்பது, முடிந்தவடுன் கலைஞ்யரை ஊக்குவிப்பது - இது அல்லவா நம் பண்பாடு? இது எங்கே மறைந்ததின்று? 

No comments:

Post a Comment