Thursday, April 5, 2012

ஆசை, பேராசை

"என்ன போட்டுக்கபோற?" நீலா மதுவை கேட்டாள்.

"தெரியல," என்று மது தோளை குலுக்கினாள். அலமாரி கதவை தறந்து, அதில் உள்ள நூற்றுக்கணக்கான துணி மணிகளை ஆராய்ந்தாள். "ஏற்கனவே போட்டுக்கொண்டவை தான் இருக்கு. புதுசா ஒண்ணுமே இல்ல," என்று முகம் சுளித்தாள்.

"துணி கடைக்கு போகலாமா? என் கிட்டயும் ஒண்ணும் இல்ல," என்று நீலாவும் சொன்னாள். இருவர் கண்களிலும் குதூஹலம் தெரிந்தது... "வா!" என்று சேர்ந்து சொல்லி உடனே புறப்பட்டார்கள். தேவை ஒரு ஆடைகூட இல்லை, ஆனால் பொருக்கி வந்தது ஒவ்வொருவருக்கும் நாலாவது இருக்கும். போட்டுக்கொள்ள காரணமா கிடைக்காது!

**

"என்னடா, புது காரா?" சரவணன் கேட்டான்.

"அமாண்டா." யது சொன்னான்.

"பழசுக்கு என்ன ஆச்சு? சரியா இல்லையா?"

"இல்லடா, அஞ்சு வருஷம் ஆச்சு, அதான். பிளஸ், பெரிய கார் தேவ பட்டிச்சி..." யது பல்லிளித்தான். 

*
"நடக்கறதுக்கு நாட்டுல எடமே இல்ல. இதுல மரம் வளர்ப்பாங்களா இல்ல ரோடு போடுவாங்களா?" என்று கேட்டுக்கொண்டே போனாள் மது.

"ஏய், புது மால் வரதாம் எங்க பேட்டைல," நீலா சொன்னாள்.

"ஒ வாவ்! இந்த மால் எல்லாம் போர் அடிக்கறது. புதுசா ஏதாவது பிராண்ட்   வரதான்னு பாக்கலாம்."

*
"இவங்க எப்போத்தான் இந்த ட்ராபிக் பிரச்சனைய தீக்கப்போராங்களோ தெரியல! வண்டி ஓட்டரதவிட சிக்னல்ல நின்னு போற டைம் தான் அதிகமா இருக்கு," யது முணுமுணுத்தான்.

"உன் பைக் இருக்கறச்சே ஈசியா இருந்துது இல்ல?"

"ஆமாம், ஆனா இந்த வெய்யில்ல தாக்கு பிடிக்க முடியல."

"அது சரிதான். ஆனா கார் அதிகமாக அதிகமாக, ரோட்டு போடறதுக்காக மரத்த இல்ல வெட்டிடறாங்க."

யது அலுத்துக்கொண்டான். எ/சியை அதிகரித்தான்.




No comments:

Post a Comment