Sunday, August 26, 2012

இயற்க்கை செய்யும் வேடிக்கை

 வளைந்து நெளிந்து ஓடும் பாதை
மலையை துளைத்த  நதிப்போல்
மரங்கள் பூக்கள் செடிக்களால்
அலங்கரித்த காவியமாய்

மேகங்களின் மூட்டம்
உருவங்களின் மாயம்
வெள்ளியின் ஓரத்துடன்
ஜொலிக்கும் பஞ்சு மெத்தை

இங்கும் அங்கும் தெளிவாய்
சிறிய அலைகள் மிதக்க
பளிச்சென்று கண்ணாடிபோல்
குட்டைகளும் ஏரிகளும்

பறவைகளும் வியக்க வைக்கும் 
எத்தனை வகையில் பறக்கும்
நிறங்களும் உருவங்களும்
படைத்தவனை போற்றும் 

குளிர்ந்த காற்று வீசும்
மிதமாய் மனது சிலிர்க்கும்
இனிய மணம் மிதக்கும்
மனதை அமைதிப்படுத்தும்

இரண்டே நாள் போதும்
இந்த அனுபவம் புதுப்பிக்கும்
தளர்ந்த மனதைக்கூட
மறுபடியும் ஊக்கவிக்கும்

No comments:

Post a Comment