Saturday, December 1, 2012

கிராதகி

செய்கிறாயா அடிக்கட்டுமா!
படுத்தாதே உதைப்பேன்!
சொன்ன பேச்சை கேள்
சாமி கண்ணை குத்திடும்

இத்தனை கொடூரம்!
எத்தனை நாராசம்
இதெல்லாம் சொல்லும்
தாயின் மனம்

வெந்து புண்ணாகி
கண்ணீர் வடித்து
ஐயோ நானும் தாயா
கிராதகி என்று புலம்பும்

அடியை மறந்து
கண்ணை துடைத்து
அந்தக் குழந்தை
அயர்ந்து மடிமேல் சாயும்

அச்சமயம் தன்னை
அறியாமல் அவள் கை
தன் சேயை அணைக்கும்
மனதில் இன்பம் பரவும்

எதனால் தான் தாயை
தெய்வம் என்கிறார்கள் என்று
சந்தேகம் தோன்றிய அதே மனம்
ஆதரவாய் சிசுவை கட்டிக்கொள்ளும்

No comments:

Post a Comment