Saturday, December 15, 2012

துப்பாக்கி கலாசாரம்

இந்த பயங்கரம் அமெரிக்காவில் அடிக்கடி நடக்கிருது இந்தியாவில் இல்லை என்று நாம் பெருமை படலாம். ஆனால் மற்ற விபத்துகள் இங்கு தானே நடக்கிறது! ட்ரக் அடியில் மூன்று வயது குழந்தை, திறந்த கிணற்றில் குழந்தை பலி, பள்ளியில் தீயினால் குழந்தைகள் மரணம், வண்டி விபத்தில் குழந்தைகள் பலி... இப்படி பல பொறுப்பில்லாத மரணங்களின் கணக்கெடுத்தால், நாம் தான் பந்தயத்தில் வெல்வோம் என்பதில் சந்தேகமே இல்லை.

இன்னொரு விஷயம். அந்த ஊரில் இருக்கும் துயரங்களும், எதிர்பார்ப்புகளும், அக்கரையின்மயினால் வரும் மனோதத்துவ வியாதிகளும் நம் ஊரில் பரவ எத்தனை நாள் ஆகப் போகிறது? இப்பவே பெற்றோர்களுக்கு நேரம் இல்லாததால் குழந்தைகளை கவனத்துடன் வளர்க்கும் கலாசாரம் மாறி, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தால் பொருப்பு தீர்ந்தது என்று நினைக்கும் இந்த காலத்தில், மகன் கேட்டான் என்று துப்பாக்கி மாதிரி வேற ஏதாவது வாங்கி கொடுக்க மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நீ எது செய்தாலும் தவறில்லை, மற்றவர்கள் செய்வதுதான் தப்புய என்று நாம் சொல்லி அவர்களுடைய சுய நம்பிக்கையை வளர்க்கிரோமாம். யாராவது நீ செய்வது தப்பு என்று சொன்னாலே கொலை வெறிதான் பொங்குகிறது. அடி, உதய், குத்து, கொலை என்று செய்திகள் தினம் பதிரிகயில் படிக்கிறோம். இதை நாம் இப்பவே தடுத்து, கருத்துடன் குழந்தைகளை வளர்க்கவில்லை என்றால், அமெரிக்கர்களாகவே மாறுவோம், சந்தேகமே இல்லை!

No comments:

Post a Comment