Sunday, December 23, 2012

எங்கே மனிதன்?

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
மனிதனை குறிக்கும் பண்பாடு?

கருணை என்ற அந்த குணம்...
அதுவே அல்லவோ மணம் தரும்?

ஆறாம் அறிவு சிந்தனை செய்ய
அல்ல தீய வழிகளை கைப்பட?

மனிதனே படைப்பில் உயர்ந்தவன் என
நினைத்திருக்க இது விந்தை என்ன?

மிருகத்தை விட கொடுமை இவனை
அரக்கனை போல மாற்றிவிட!

மனிதத்தன்மையை தேடும் என்னை
அடி பைத்தியம் என்று கேலி செய்ய.

No comments:

Post a Comment