Sunday, January 20, 2013

வறட்சி

நிரம்பி வழியும் குடம், அதில்
தேங்கி நிற்கும் நீர்
புதுமைக்கு இடமில்லை
பழமையே ஓங்கி நிற்கும்

குடத்தை உடைத்தாலோ
அழுகிய நீர் மண்ணில் கலக்கும்
ஆனால் எதில் மீண்டும்
நிரப்புவது புதிய நீரை ?

பானை நீரை வடித்து
காய வைத்து செய்வோம் தயார்
மனமென்னும் குடத்தை
நிரம்பி வரும் புது சிந்தனைக்கு



No comments:

Post a Comment