Saturday, January 12, 2013

பொங்கல் தினத்தன்று சில சிந்தனைகள்

கதிரவன், மழைமேகம், செம்மண் கூடி
பூமி விளையும் அழகினை கண்டு
அறுவடை செய்யும் நாளதை குறித்து
வாழ்த்தி பணிந்திடும் திங்களன்று

விவசாயமே நிலைக்குமா என்று அஞ்சும்
நிலைமைக்கு நாம் வந்தது ஏன் என்று
நினைக்க வைக்கும் இந்த நேரத்திலாவது
முழித்துக்கொண்டு யோசிப்போம்

நெசவு, விவசாயம் போல பழன்தொழில்கள்
இன்று அதை செய்ய ஆட்கள் தேவை
பொறியியலில் போய் விழுபவர்களுக்கு
நல்ல தரமான வேலை தேவை

எல்லாவற்றிற்கும் விலை போடும்
மனிதர்களிடையே மண்ணின் மதிப்பு
அதை விற்று கிடைக்கும் பணமே என்றால்
'சோத்துக்கு என்ன வழி' என்று கேட்டு பயனுண்டோ?
 

No comments:

Post a Comment