Friday, April 19, 2013

சோதனை - சிறுகதை



"அங்க என்ன செய்யற?" அம்மா மகளைக்கேட்டாள்.
ஐந்து வயது மகள், தன் பிஞ்சு போல் கைகளில் ஒரு பொம்மையை வைத்து விளயாடிக்கொண்டிருப்பதை பார்த்து திரும்பிய அவள், ஏதோ கண்ணை உறுத்த உற்று கவனித்தாள்.
அந்த பொம்மையின் காது, மூக்கு, வாயில் எல்லாம் ஏதோ ஒரு சிறிய பொருள் சொருகி இருந்ததது. அந்தச் சின்ன்ப்பெண் அந்த பொம்மையின் கால்களுக்கு இடையே எதையோ சொறுகப்பார்த்துக்கொண்டிருந்தாள்.
"என்ன செய்யற?" என்று மனம் படபடக்க அம்மா கேட்டாள்.
"பக்கத்து வீட்ல புதுசா வந்திருக்கர அங்கிள் இந்த வெளயாட்ட சொல்லிக்கொடுத்தாங்கமா. ஆனா இந்த பொம்ம சரியா இல்ல. இந்த சின்ன ஊசிக்கூட உள்ள போக மாட்டேங்குது பாரேன்!"
அம்மா மெதுவாக உட்கார்ந்து  "நீ ஒன் வயசு பசங்களோட மட்டும் தான் வளயாடணம், சரியா?"
"அந்த அங்கிள் தான் கூப்படறாம்மா. என்க்கும் பிடிக்கல. ஆனா புதுசா ஏதாவது கத்துக்கறச்ச அப்படித்தான் இருக்கும்னு சொன்னார். அப்படியாமா?" அந்த குழந்தை சொல்லும்பொழுது விம்மிக்கொண்டு அழுகை வந்தது.
தன் மகளை காப்பாற்றி விடுவாலள் அவள். ஆனால் மற்ற குழந்தைகளிற்கு என்ன வழி?

No comments:

Post a Comment