Sunday, April 28, 2013

வாழக்கை சக்கரம் - கவிதை

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்?

காலம் மாற மாற
பழமை உதிர்ந்து விழ  
முடிந்ததோ வாழ்க்கையே 
என்ற ஐயம் மெல்ல எழ 

நாற் புறமும் வெறிச்சிட   
சூன்யமும் நிசப்தமும் 
மூச்சே நின்றுவிட்டதோ 
என்ற பயம் சூழ 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

இந்த பசுமை 
எங்கும் பரவ 
என்றும் நிலைக்கும் 
என்ற நம்பிக்கை  தோன்ற 

அதை ஒழிக்கும் பொருட்டு 
வாழ்க்கை தளர 
சக்கரத்தை சுழட்டும்  
கை எது என்று கேட்க 

என்று பிறந்தது?
எப்படி வளர்ந்தது?
எங்கிருந்து துளிர்த்தது 
புதிய ஜீவன்கள்?

No comments:

Post a Comment