Friday, October 18, 2013

தேவி வந்தனம்

மனதில் நிறைந்தாய் வலிமையாக
எதையும் எதிர்க்கும் சக்தியாக

நாவிலிருந்தாய் இனிமையாக
மென்மையான வாக்தேவியாக

நாட்டில் படர்ந்தாய் செழிப்பாக
இன்பமளிக்கும் மெய்ப் பொருளாக

உன்னை வணங்கும் ஏழை எனக்கு
வாரி வழங்கம் அன்னை நீயே

கர்வமெனும் அரக்கன் எழுமுன்
சீறி எழுந்தாய் பத்ரகாளியாக

தாயே உன் திருவடியில் கிடக்க
என்றும் அருள்வாய் முத்தேவியாக. 

No comments:

Post a Comment