Saturday, September 5, 2015

தேய் பிறை - பாகம் 2



"நீ எப்பவும் பிஸி," கதிர் கடு கடுத்தான். "ஏன் இவ்வளவு இழுத்து விட்டுக்கற? குழந்தைக்கு நீ வேணும் இந்த சமயத்துல... இப்போ நீ பாட்டு கத்துக்கலன்னு யாரு அழுதா?" மேலும் ஏசினான்.

பிரபா முறைத்தாள். "நா யாருக்காக பாட்டு கத்துக்கணம்? எனக்காக பாடறேன். உன்ன கேக்க சொன்னேனா?" பதிலுக்கு எகிறினாள். "குழந்தைய உன் கிட்ட பாத்துக்கோன்னு சொன்னேனா?"

"நீ தான் அம்மா. மத்தவங்க கிட்ட விட்டுட்டு போறதுல என்ன அர்த்தம்? எனக்கு உன் ப்ரெண்ட்ச துளிக் கூட பிடிக்கல..."

"எனக்கு அவங்கள பிடிச்சிருக்கு. அதுவுமில்லாம, அவங்க கொஞ்ச நேரம் பாத்துகிட்டதுனால நா அம்மா இல்லன்னு ஆயிடுமா? அவங்க கொழந்தைய அவங்களுக்கு தேவங்கரச்சே நான் பாத்துக்கறேன். எங்களுக்குள்ள ஒரு understanding... நீ மூக்க நுழைக்காத..." என்று கண்டித்துக்கொண்டாள்.

"அது என் கொழந்தையும் தான்," அவன் அவளுக்கு நினைவூட்டினான். 

"எனக்கு ஞாபகமிருக்கு... உனக்கு இருக்கான்னுதான் தெரியல," என்று பதிலடி கொடுத்தாள். 

"உன்னோட பேசறதே waste. எதுக்கெடுத்தாலும் argue பண்ணுவ," அவன் நகர்ந்தான்.

"அனாவச்யத்துக்கு என்ன வம்புக்கு இழுத்ததும் நீதான்," அவள் விடாமல் பின் தொடர்ந்தாள்.

"அம்மா தாயே, என்ன விட்டுடு. இந்த குட்டி மட்டும் இருந்திருக்காட்டா நான் எங்கேயாவது  தனியா போயிருப்பேன்... நமக்குள்ள இருக்கற உறவு அவளுக்காகவாவது தாங்கணும்னா கொஞ்சம் நீ விட்டு கொடுக்க கத்துக்கணம்."

"உனக்கு அந்த பொறுப்பில்லையா?"

"நான் எவ்வளவு பொருத்து போறேன்னு உனக்கு தெரியாது."

பிரபா அவனை முறைத்தாள். "நான் பண்ற adjustments எல்லாம் நான் உங்களுக்கு எடுத்து சொல்லட்டுமா?"

"என்ன, போட்டி வெச்சுக்கலாமா? உன் பிரெண்ட்ஸ வேணும்னா ஜட்ஜ் ஆக்கிடலாம்!" கதிரும் சலிக்காமல் பதில் கொடுத்தான்.

"என் பிரெண்ட்ஸ இழுக்காதீங்க இதுல. அவங்க கொழந்தைய பாத்துக்கறது உங்களுக்கு பிடிக்கலன்ன நீங்க ஆபீஸ்லேர்ந்து சீக்கிரம் வந்து குழந்தைய பாத்துக்கங்க."

இருவரும் முகம் சுளித்து ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளாமல் தத்தம் வேலையில் மூழ்கினார்கள். இந்த சண்டை ஒரு தினசரி காட்சியாக மாற ஆரம்பித்தது. 

இப்படியும் ஒரு மண வாழ்க்கை தேவையா? குழந்தையை பாதிக்கும் அளவுக்கு இப்பொழுது இல்லையென்றாலும் ஒரு நாள் அது புரிந்துகொள்ளத்தான் போகிறது. அப்பொழுது தாய் தந்தை சேர்ந்து இருக்கிறார்கள் என்பதில் சந்தொசப்படுமா? இல்லை பிரிந்து போய் மரியாதையை காபாற்றிக்கொண்டு குழந்தைக்கும் நல்ல வாழ்க்கை அமைப்பதா? பிரபா குழம்பினாள்.

திருமணமான ஆரம்பத்தில் இருந்த சுகமான நாட்களை எண்ணி, அவை எங்கு பறந்து விட்டன என்ற நினைப்பில் அடிக்கடி மூழ்கினாள். அந்த சந்தொசமில்லாத மண வாழ்க்கை தேவையா என்ற கேள்வி அவளை வாட்டியது...

அடுத்த வாரம் - அமாவசையா பௌர்ணமியா, மூன்றாம் பாகத்தில் பார்க்கலாம். 
 

 

No comments:

Post a Comment