Tuesday, March 28, 2017

கண்ணாடி

கண்ணாடியின் முன்னாடி
நான் என்னுடன் விளையாடி
என் கண்களுடன் உறவாடி
என் உண்மையென்ன என்று தேடி

அறிந்த பின்னும் அறியாமல்
பார்ப்பதெல்லாம் புரியாமல்
தவறுகள் சிலது  தெரியாமல்
அதைச் சகிக்க முடியாமல்

விழுந்தது கண்களில் திரை
நாடகம் அதில் பல வகை
தினம் ஒரு புதுக்  கதை
அதற்கும் இருந்தனர் பல ரசிகை

நிழலே நிஜமாக
பொய்யே மெய்யாக
பிம்பம்  தடுமாற
உயிர்  ஊசலாட

கண்ணாடி பொய்யாகுமா?
கண்கள் தடுமாறுமா?
கற்பனை உண்மையாகுமா?
தன்னையே ஏமாற்றமுடியுமா?

மனதும் தெளிந்தது
திரையும் கிழிந்தது
கண்ணும் கண்ணும் சந்தித்தது
புது நம்பிக்கை பிறந்தது

இதுவே நான்
நானே தான்
என் நிஜம் இதுதான்
இதில் எனக்கு பெருமைதான். 

அகமும் முகமும் ஒன்றே
நிஜத்தால் பொய்யைய் வென்றே
நம்பிக்கையுடன் முன்னே சென்றே
வாழ்வேன் இனி நன்றே 

No comments:

Post a Comment