Thursday, August 11, 2011

Poo Malarattume - Let it Blossom

ஒரு போர்வைக்குள்
மூடப்பட்ட அந்த பூ
காற்றுக்கும், வெளிச்சத்திற்கும்
மன்றாடிய அந்த பூ

ஒரு அன்புப்பார்வைக்கு
ஏங்கிய அந்த பூ
தன் மணம் பரவ
அல்லாடிய அந்த பூ

ஆதரவைத்தேடி இருட்டில்
நடுங்கிய அந்த பூ
அந்த பூ சிதருவதர்க்குள்
ஒரு முறை, ஒரே ஒரு முறை

அது தேடும் வெளிச்சத்தை
அது மேல் படர அந்த
போர்வையை கிழிக்க
மாட்டாயா, என் அன்பே?

அது பூத்து,
மணம் பரவ
அழகு மலர
ரசித்து சிரிக்க

உன் மனமிரங்கி,
அன்பு கசியும்
ஒரே ஒரு பார்வை
போதுமே, என் அன்பே

அந்த வானமே
அந்த பூவை நோக்கி
நீரும் வெயிலும் 
பொழிந்தாற்போல்

மகிழ்ந்து, மலர்ந்து
பரவசமடைந்து
உல்லாசமாக 
விரியும் அந்த பூ




No comments:

Post a Comment