Saturday, May 26, 2012

தோல்வி

வெகு நாட்களுக்கு பிறகு நேற்று கிரிக்கெட் பந்தயம் பார்த்தேன். குழந்தைகள் சென்னை சூப்பர் கிங்க்சுக்கு விசல் போட்டார்கள், ஆனால் எனக்கோ ஒரே கடுப்பு. கொஞ்ஜம் தோல்வியும் வாழ்க்கையில் முக்கியம் இல்லையா!

முரளி விஜய் வெளுத்து வாங்கினான். ஆனால் என்னை பொறுத்த வரையில் அது மட்டும் இல்லை சென்னையின் வெற்றிக்கு காரணம். டெல்லி குழு பந்து வீசும் பொழுதே தோல்வியை எதிர்பார்த்தார் போல் இருந்தது. ஒவ்வொரு ஆறுக்கும், நான்குக்கும் பந்து வீசுபவன் தன் தோல்வியை ஒப்புகொண்டார்போல முகத்தை தொங்க போட்டுக்கொண்டனர். ஒரு கேட்ச் மிஸ் ஆகும் பொழுது அந்த பீல்டர் அழுது விடுவானோ என்று தோணியது.

ஏனோதானோ என்று தான் டெல்லி ஆட்ட வீரர்கள் பேட் செய்ய வந்தார்.

எனக்கு ஆட்டத்தைப்பற்றி ரொம்ப தெரியாது என்றாலும் இப்போதெல்லாம் பேச படும் 'பாடி லாங்குவேஜெய்' வைத்து தோல்விக்கு அறிகுறி என்ன என்பதற்கு அவர்கள் பலத்த உதாரணம்.

கொல்கடாவாவது இன்னும் தைரியத்துடன் ஆடும் என்று எதிர்பார்க்கிறேன்.

No comments:

Post a Comment