Saturday, February 11, 2012

வழிகாட்டி

ஒருவன், சிறுவன். பதினைந்து வயது என்கிறார்கள். ஆனால், குழந்தையை போல, தன்னை சொல்லிவிட்டார் பார்த்தாயா என்ற ஆதங்கம். வழி காட்ட யாருமா இல்லை?

ஒரே செயலில் இரு குடும்பங்களில் துன்பம். தன் ஆசிரியையை கொன்று அவன் தப்பிக்கலாம் என்று நினைத்தானா? எப்படி தப்பிப்போம் என்ற நம்பிக்கை வந்தது? இல்லை, மாட்டிக்கொள்வோம் என்ற பயம் கூட இல்லையா! எதற்க்காக இந்த காரியத்தை செய்கிறோம் என்று யோசித்தானா? இதை செய்ததில் அவனுக்கு நிம்மதியா? அவன் பெற்றோர்கள்? என்ன செய்வார்கள்? "உன்னால் தான்" என்று ஒருவருடன் ஒருவர் போட்டி போடுவார்களா?

அந்த ஆசிரியைக்கு இரு மகள்கள். தந்தை கூட இல்லை. என்ன செய்வார்கள்? தாயையும் இழந்து, வாழவும் வழி இல்லாமல் திணறும் அவர்களுக்கு யார் ஆறுதல் சொல்லமுடியும்?

இனி எந்த ஆசிரியராவது தவறாக செல்லும் மாணவரை கண்டிப்பாரா? ஏன், பெற்றோர்கள் கூட யோசிக்க மாட்டார்கள்? பின்னே அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டி யார்?

அந்த சட்டசபையில் ஆபாச படத்தை பார்க்கும் தலைவர்களா?

No comments:

Post a Comment