Saturday, February 25, 2012

ஏமாற்றம் - சிறுகதை

ராகவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு வருத்தம், இதற்க்கா என்று! ஏனோ நண்பன் சோமுவை பார்க்கும் பொழுது எல்லாம் ஆத்திரம் பொங்கி வந்தது. எப்படி அவன் மேல் இவ்வளவு நம்பிக்கை ஏற்பட்டது? ஏன் அது பொய்யானதும் இவ்வளவு மனத்தாக்கல்? ச்சே! தான் என்ன சிறு பிள்ளையா? "நீ எமாத்தினாய், அதனால் நான் உன் பேச்சுக்கா" என்று நினைக்க தூண்டும் இந்த எண்ணம் அவனுக்கே அறுவறுப்பாக இருந்தது.


ஆனாலும், இவ்வளவு பழகியும், சேர்ந்து ஓட்டப்பந்தயத்திர்க்கு பயிற்ச்சிப் பெற்றது மட்டும் அல்லாமல், இவன் மனம் நொந்தபோது கூட இருந்தது சோமுதானே? தன்னால் முடியுமா என்று இவன் பயந்த பொழுது, "வா, இன்னும் ஒரு முறை ஓடலாம்" என்று தேற்றியவனைத்தானே நண்பன் என்று எண்ணினான்?


அவன் அந்த பந்தயத்தை பார்க்க வருவானா என்ற சந்தேகம் கூட ராகவன் மனதில் எழவில்லை. தன் மனதின் சஞ்சலங்களை புரிந்துக்கொண்டவன், அந்த உழைப்பிற்கு பலன் தரும் நாளன்று பார்வையாளர்கள் இருக்குமிடத்திலிருந்து கை தட்டி உற்சாகப்படுத்துவான் என்ற எதிர்பார்ப்பு எப்படி இவன் மனதில் உருவாயிற்று? 


"சாரி மச்சான், பிரெண்ட்ஸ் எல்லாம் சாப்பட போலாம்னு கூப்பிட்டாங்க... அதான்," என்று எவ்வளவு சுலபமாக கூறி விட்டான்! நிறைய பேர் வந்து கை குலுக்கியும், அந்த சோமு இல்லாத ஏமாற்றம் தான் இன்று பெரும் மலையாக அவன் மனதில் நின்றது.


இதற்க்கு சோமு காரணமா, இல்லை அவன் வருவான் என்ற எதிர்பார்ப்பா?

No comments:

Post a Comment