Sunday, February 5, 2012

இளமையில் முதுமை

ஏதோ ஒரு பள்ளியில் படித்து எப்படியோ முன்னுக்கு வந்த தலைமுறை நம்முடையது. ஆனால் இன்று தன குழந்தைகளுக்கு ஒசத்தியான படிப்புத்தான் கொடுக்க வேண்டும் இன்று திண்டாடும் தலைமுரையாகி விட்டது. அதில் மாட்டி முழிப்பவர்கள் - 
  • காசு கொடுத்து, அல்ல சிபாரிசு மூலம் பள்ளியில் சேர்க்க மாட்டேன்; 
  • வெறும் வருட கடைசியில் பரீட்சையில் நல்ல எண் வாங்கினால் போதாது, என்ன படிக்கிறோம் என்று தெரிந்திருக்க வேண்டும்; 
  • படிப்பு மட்டும் இல்லாமல் மற்ற விஷயங்களிலும் என் குழந்தைக்கு வளர்ச்சி வேண்டும்

இப்படி நினைக்கும் பெற்றோர்களுக்கு இன்று பள்ளி தேடுவதே நரகம் என்று கண்டு கொண்டேன்.
காசு மட்டும் இருந்தால் போதாது, சிபாரிசும் வேண்டும்.
அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் வேறு எதாவது பிறப்பிலேயே குறைகள் இருந்தால், ஐயோ! பிறப்பதே தவறு! கல்வியை பற்றி நினைக்கவே கூடாது.
மற்ற விஷயங்களுக்குத்தான் வெளியில் அவ்வளவு வகுப்புகள் இருக்கே! அதில் ஏதாவது ஒன்றில் சேர்த்தால் போதாது. எல்லாவற்றிலும் சேர்த்து குழந்தையின் குழந்தைத்தனத்தையே அழித்துவிடவேண்டும்.
அந்த குழந்தையின் சிந்தனையும் எப்படியாவது சிறிய வயதிலேயே பழுத்து விடவேண்டும். அப்பொழுதுதான் வாழ முடியும்.
மொத்தத்தில் இயற்கையை அழிப்பதுதான் நம் பெரியோர்களின் வேலை போல!




No comments:

Post a Comment