Friday, May 11, 2012

சுற்று சூழல்


 ஒரு இடத்திற்கு சென்ற உடனே நம்மை அது சில சமயம் கவர்ந்து விடுகிறது. சில நேரங்களில், என்ன தான் அழகாக இருந்தாலும் அந்த இடத்தை விட்டு சீக்கிரம் கிளம்ப வேண்டும் என்று தோணி விடும். சில மனிதர்களை பார்த்தால் சுகமாக இருக்கும். சிலர் என்ன சிரித்துப் பேசினாலும் மனதிற்கு கசப்பாகவே இருக்கும். 

எத்தனை சபைகளில் ஆடினாலும், கோவில்களில் ஆடுவது போன்ற ஒரு சுகம் கிடைப்பது அறிது. முயற்சி, உழைப்பு எல்லாவற்றிற்கும் ஒன்றுதான் என்றாலும் சாமிக்கு முன்னால் ஆடுவது போன்ற சுகம் சபையில் ஆடும் பொழுது கிட்டாது. இதுவும் அந்த இடத்தின் ஆற்றலை காமிப்பது என்று நான் எண்ணிக்கொள்வதுண்டு. 

பூஜை, தியானம், இதற்க்கு உள்ள வலிமை, நிறைய மக்கள் திரண்டு, தன் நினைவுகளை எல்லாம் ஒரு சிலையின் மேல் செலுத்தும் பொழுது அதற்க்கு எல்லாருடைய மன ஆற்றலும் போய் சேர்வதுதான் இதற்க்கு காரணம் என்றால் நாம் கூடி சாதிக்க கூடியது எவ்வளவு இருக்கிறது! இந்த ஆற்றலை நல்ல வழியில் செலுத்துவதற்கும் அதே மனோபலம் தானே தேவை! நல்லது செய்ய என்ன தடை?

No comments:

Post a Comment