Monday, May 21, 2012

மேகத்தின் நடுவில்

 மலை பிரதேசம். சுத்தி தேனீர் செடிகள். நதியும் நீர் மலையிலிருந்து கொட்டும் காட்சிகளும் மனத்தை ப்ரமிக்க வைத்தன. இந்த கோடை காலத்திலும் இப்படி குளுமையா என்று ஆச்சர்யமாக இருந்தது.

முன்னார் மற்ற மலை பிரதேசங்களை விட இயற்கையில் செழிப்பாக இருந்தது. செயற்கையான இயற்கை - ஏன்னென்றால் மரங்களை வெட்டி தேனீர் எஸ்டேட்கள் உருவாயிருக்கும் அல்லவா? ஆனாலும் பசுமையை பார்க்க யாருக்குத்தான் பிடிக்காது.

ஆனால் ஊர் முழுதும் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணியா பொழுது ஒரு மலை மேல்  காத்திருந்தது ஒரு இன்ப அதிர்ச்சி. வெய்யிலில் செல்லும் பொழுது ஒரு மலை புகைத்து கொண்டிருப்பது போல் இருந்தது. அங்கு தான் செல்கிறோம் என்று கூட அறியாமல் இரு பாறைகளுக்கு இடையில் புகுரும் பொழுது எதோ தேவலோகம் சென்று விட்டார் போல பிரமிப்பு. அப்படிஒரு மேக மூட்டம். பத்தடி தாண்டி தெரியக்கூட இல்லை.

ஏழாவது சொர்க்கம் என்பது இது தானோ என்று கூட தோணியது. அந்த மாதிரி அனுபவம் இந்த ஜன்மத்தில் நான் எதிர்பார்க்க வில்லை...

No comments:

Post a Comment