Wednesday, June 20, 2012

பறவைகளின் விளையாட்டு

பள்ளிகரணை ஏரியின் அருகில் நிற்க முடியாது! அவ்வளவு துர்நாற்றம்!

ஆனால் அதையும் மிஞ்சி ஒரு அதிசயமான காட்சி கண்ணை பறித்தது! சிறிய பறவைகளும் காக்கையும் காற்றுடன் விளையாடும் விளையாட்டு. அந்த வேகமாக அடிக்கும் காற்றில் இந்த பறவைகள் சிறகடிப்பதை நிறுத்தி காற்றில் பின்னால் தள்ளப்படுவதை மிக ரசித்தன. அதை பார்க்க பார்க்க, நாமும் அப்படி பறந்தால் எவ்வளவு ஜாலியாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்.

அதே காட்சி, இந்த வாரம் மகாபலிப்புரத்திலும் கண்டேன். கடலோர கோவில் உச்சியில் காகங்கள் பறப்பதை நிறுத்தி காற்றால் பின்னால் தள்ளப்பட்டதை ரசித்துககொண்டிருந்தன.

நமக்கு மட்டும்தானா விளையாட்டுகள்! உண்ணுவதையும் பெறுவதையும் தவிர இந்த பறவைகளுக்கும் தான் வாழ்க்கையை ரசிக்க தெரியும் என்று அன்று நான் கண்டுகொண்டேன். 

No comments:

Post a Comment