Monday, July 2, 2012

மொபைல் போனும் நாமும்

ஒரு காலத்துல புத்தி சரியா இல்லாதவங்கதான் தனக்குத்தானே பேசிண்டு, சிரிச்சிண்டு போவாங்க. இப்போ தான் எவ்வளவு பிஸின்னு காட்டறதுக்கு இது ஒரு வழி. வாக் போனாலும் சரி, வண்டி ஓட்டினாலும் சரி, காதுல ஒரு வயற மாட்டிண்டு, கத்தி பேசினாதான் தனக்கு மதிப்புன்னு ஆயிடுத்து!

நடக்கரவங்க அப்படி பண்ணினா பரவா இல்லன்னு சொல்ல முடியாது... ஆனா அதுல மத்தவங்களுக்கு ஆபத்து கொறச்சல். வண்டி ஓட்டரவங்கள எவ்வளவு தான் எச்ச்சரிக்கறது! இந்த பேருந்து விபத்துக்கு அப்பறமாவது புத்தி வருமா? ஒரு பாலத்துக்கு மேலேந்து விழுந்தா அந்த பேருந்துல இருக்கறவங்களுக்கு மட்டுமில்ல, கீழே போறவங்களுக்கும் எவ்வளவு ஆபத்து!

சாதாரணமாவே பேருந்து ஒட்டறவங்க ரோடு தனக்காக மட்டும் தான் போலவும், மத்தவங்க கொசு மாதிரியும் நெனப்பாங்க. இப்போ தன்  வாழ்க்கைக்கே கூட முக்கியத்வம் கொடுக்கலையே!

இந்த மொபைல் போன் வந்ததுக்கு முன்னாடி நாம எல்லாம் வாழலையா? ஏன் இப்படி அடிமையாயிட்டோம் அதுக்கு?

No comments:

Post a Comment