Tuesday, June 12, 2012

முள்

பூவில் மட்டுமா?
நாவிலும் அல்லவா?
சுள்ளென்று தைத்ததெது?
உன் வாயிலிருந்து உதிரும்
ஆணியைப்போல சுளீரென
குத்தும் வார்த்தைகள் தானே?

நான் உன்னில் காணும்
அந்த முள்ளை
என்னிலும் காண்கிறாயா!
என்ன அதிசயம்!
என் தேனையும் விட
இனிய சொற்களில் விஷமா!

இருவரும் மனதில்
ஒருவரை ஒருவர்
தேளைப்போல கொட்ட
என்ன அற்புதமான
உறவிது! பூப்போல
மலரும் சிரிப்பில்
ஒளிந்திருக்கும் ஒரு முள்

No comments:

Post a Comment